Wednesday, August 29, 2007

கோல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

கால்பந்தில் இந்தியா எதையாவது உருப்படியாக வென்றதாக நினைவிருக்கிறதா? ஆனால் 13 முறை முயன்று இந்த தடவை இந்தியா நேரு கோப்பையைக் கைப்பற்றியுள்ளது! வாழ்த்துக்கள்!

நேரு கோப்பை என்றவுடன் பல ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயலலிதா சென்னை நேரு விளையாட்டரங்கைப் புதுப்பித்து நடத்திய போட்டிகளின் நினைவு வருகிறது. விஜயன் ஒமானுக்கு எதிராக அடித்த கோலும், அதை எங்கள் தெரு மாமாக்கள்கூட கொண்டாடியதும், தென்கொரிய அணியின் சாகசங்களும் இன்னும் ஞாபகம் இருக்கின்றன.

சமீபத்தில் இந்தியா FIFA தரவரிசையிலும் சிறிது முன்னேறியிருக்கிறது. சரி, சரி, ஓப்புக்கு சப்பானிகள் பட்டியலில் கொஞ்சம் மேலே வந்திருக்கிறோம். அவ்வளவுதான்! ஆனால் சீனாவை உலகக்கோப்பைக்கு அழைத்துச்சென்ற ஹக்டன் நமது பயிற்சியாளராக அமர்த்தப்பட்டது ஒருவேளை பலன்களை கொடுக்க ஆரம்பித்திருக்கலாம். உலகக்கோப்பை சமயத்தில் நான் எழுதிய பதிவு இங்கே.

No comments: