Monday, October 27, 2008

தீபாவளி வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! மகாவீரரின் வாழ்வியல் நெறிகள் நம்மை ஆட்கொள்ளட்டும்!

Saturday, October 25, 2008

கொடுத்தாய் வாழி இந்தியா!

மிண்ட் பத்திரிக்கையில் இன்று வெளியான நிரஞ்சன் ராஜதக்ஷாவின் கட்டுரை மிகவும் சிந்திக்க வைத்தது.

உலகின் முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, அவற்றின் இயலுமை வரிசையில் கோபன்ஹேகன் இணக்க முடிவு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையின்படி குழந்தைகளுக்கு உயிர்சத்து மாத்திரைகள் வழங்குவது உலக வெம்மையை தடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைவிடவும் அதிக பலனளிக்கக்கூடியது என்று தெரிகிறது.

இன்றைய மிண்டில் குழந்தைகள் நலன் மற்றும் பிற விசயங்களுக்காக உழைக்கும் பல தொண்டு நிறுவனங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் சேகரித்த பட்டியல் கீழே.

Meljol, Mumbai.
Able Disabled All People Together (ADAPT), Mumbai.
Action for Ability Development and Inclusion (AADI), Delhi.
Spastics Society of Karnataka, Bengaluru.
Vidya Sagar, Chennai.
SOS Children's Villages of India, Delhi.
Balagurukulam, Chennai.
Room to read, Delhi.
Akshara Foundation, Bengaluru.
Association of Writers and Illustrators for Children, Delhi.
Pratham, Mumbai.
Pankhudi, Bengaluru.
The Blind Relief Association, Delhi.
National Association of the Blind, Mumbai.
Esha - People for the Blind
Mumbai Mobile Creche
Door step School, Mumbai.
Deepalaya, Delhi.
Akanksha, Mumbai and Pune.
Butterflies, Delhi.
Make-a-wish Foundation, Delhi.
Cancer Foundation of India, Kolkata.
Cancer Patients Aid Association (CPAA), Mumbai.
Arushi (Salaam Baalak Trust), Gurgaon.
Pranab Kanya Sangha, Kolkata.
Parikrma, Bengaluru.
Nanhi Kali, Mumbai.
Jamghat, Delhi.
Aasra, Mumbai.
Lifeline Foundation, Kolkata.
Childline India Foundation, Mumbai.
Roshni, Secunderabad.
Sneha, Chennai.
Maithri, Kochi.
Sumaitri, Delhi.
Naz Care Home, Delhi.
The Freedom Foundation.
Manavya, Pune.
Child Survival India, Delhi.

Thursday, October 23, 2008

தமிழ் இனவெறிவாதம் ஒழிக!

தமிழக அரசியல் கட்சிகளின் இனவெறிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இப்போது தனித்தமிழ்நாடும் வேண்டுமாம் (?!) ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்?) கொடுப்பது எவ்வளவு நியாயமாக இருக்குமோ அவ்வளவு நியாயமானது ஈழத்தமிழர் போராட்டம்.

தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கை எதையாவது இவர்களை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! எதற்கெடுத்தாலும் 1983 ஜூலைப் படுகொலைகளை வைத்தே தங்களது இனவெறிக்கு நியாயம் கற்பிப்பவர்கள் இவர்கள்.

இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள் அளவுக்கதிகமான பதவிகளை தங்களிடம் வைத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சமூக நிலையை மாற்றி, சிங்களவரின் உரிமைகளை நிலைநாட்ட படிப்படியாக பல செயல்களைச் செய்தது.

அந்த செயல்களில் பல நியாயமில்லதவை. இந்தியாவில் இந்தியை தேசிய மொழியாக்க நினைத்ததுபோல அங்கு சிங்களத்தை ஆக்க முயற்சித்தார்கள். தமிழகத்தில் பிராமணரின் பங்களிப்புகள் (கிரந்தம், நாட்காட்டிமுறை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு. செய்தித்தாள்கள் ...) சிறுமைப்படுத்தப்படுதல், அவர்களின் குடுமி அறுத்தல் போன்றவற்றிற்கு நிகரான செயல்கள் இலங்கையிலும் சிங்களவரால் செய்யப்பட்டன.

இந்தகைய செயல்கள் தமிழர், சிங்களர் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது இயல்பே. அது இனக்கலவரத்தில் முடிந்ததும் எதிர்பார்க்கக்கூடியதே. இனக்கலவரத்தில் அரசுப்படைகள் எவ்வளவு நடுநிலையோடு செயல்படும் என்பதை சொல்லவும் வேண்டுமா? குஜராத், பம்பாய் கலவரங்களில் நாம் பார்க்காத 'நடுநிலைமையா'? தமிழகத்திலேகூட காவல்துறையினர் "முஸ்லீம்களை போய் அடியுங்கள், நாங்கள் வந்தவுடன் ஓடிவிடுங்கள்" என்று சொன்னதை அடித்தவர் மூலமாகவே நான் கேட்டிருக்கிறேன்!

அதே போல 1983இல் நடந்த இனப்படுகொலைகளில் இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்கேற்றது உண்மையே. அதற்காக இலங்கைத் தமிழருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் அளவுக்கெல்லாம் சென்று இந்தியா உதவி செய்தது. எதிராளியை பலமாக்கி இன்னொரு கட்சியை பேச்சுவார்த்தைக்கு வரவைப்பது எங்கும் நடப்பதே. அவ்வாறு 1987இல் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனாய் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களே தாம் அதிக வாழும் இடங்களை ஆளும் வகையில் மாகாண அரசுகள் ஏற்படுத்த இலங்கை ஒப்புக்கொண்டது.

ஆனால் ஆயுத பலமும், தமிழ்நாட்டு இனவெறியர்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்ற புலிகள் என்னும் பாசிச, இனவாத, பயங்கரவாத அமைப்பு, 'நம் கை ஓங்கியிருக்கும் போது எதற்காக அமைதி வழியில் செல்லவேண்டும்' என்று 1987 உடன்படிக்கையை செல்லாக்காசாக்க முயற்சித்தது. ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கு சென்ற இந்திய இராணுவத்தை (ஜெயவர்த்தனே உதவியுடன்) போரில் சிக்கவைத்தது.

அவ்வாறு சிக்கிக்கொண்ட இந்திய இராணுவம் புலிகளை நேரடியாக எதிர்கொண்டு, அவர்களை பூண்டோடு அழிக்காததையும், இந்திய இராணுவ வீரர்கள் ஈழத்தமிழர்பால் செய்த அத்துமீரல்களையும், நான் ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகள் என்று முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1987-88 இல் ஒழுங்காகச் செய்து முடிக்காத புலிகள் அழிப்பை, இன்று ராஜபக்சே அரசும், இந்திய அரசும் செய்து முடிப்பது மிகவும் வரவேற்கத் தகுந்ததே.

தமிழகத்தில் புலிகளை ஆதரிக்காதவர்கள் தமிழ்த்துரோகிகள் என்றால், ஆதரிப்பவர்கள் (இந்திய) தேசத்துரோகிகள் என்று ஜெயலலிதா சொல்வது சரியே. மேலும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் (இலங்கை) தேசத்துரோகிகள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

ஈழத்தமிழரிடம் தற்போது நியாயமான கோரிக்கைகள் ஒன்றுமேயில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் போல் இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல. (இந்திய வம்சாவளித் தமிழரில் பலர் சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்தியா திரும்பினர். முத்தையா முரளிதரனின் குடும்பமும் திரும்பியிருந்தால் நமக்கு நல்ல சுழற்பந்துவீச்சாக்ளர் இடைத்திருப்பார்!).

தாங்கள் ஆரம்பித்த இனவெறி அரசியல் மற்றும் ஆயுதப்போராட்டத்தின் பலன்களை ஈழத்தமிழர் இன்று அனுபவிக்கிறார்கள். இவர்களை அடக்க இலங்கை இராணுவம் நியாயமாகவோ, அத்துமீறியோ நடவடிக்கை எடுத்தால் 'இனப்படுகொலை' என்று அந்தர்பல்டி அடிக்கிறார்கள். உலகின் பிறநாடுகளில் அண்டிப்பிழைத்தும்கூட தங்கள் நாட்டில் தீவிரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இவர்களுக்கு தமிழக மக்கள் வேறு உதவவேண்டுமாம்! நல்ல கதை!

நிற்க. இலங்கை அரசும், இராணுவமும் எப்போதும் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் 25 ஆண்டு தொடர் சண்டையில் சிங்களர் மட்டும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. 13வது சட்டத்திருத்தில் சில ஷரத்துகளை மாற்றவோ, சேர்க்கவோ வேண்டுமானால், அதை தமிழ் அரசியல் கட்சிகள்தான் முயன்று செய்யவேண்டும். புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பும், அவர்களின் தமிழ்நாட்டு இனவெறி நண்பர்களும் அல்ல.

மேலும் ஈழத்தமிழர் இலங்கையின் நல்ல குடிமக்களாய், அமைதியாய் வாழவிரும்பினாலும் புலிகள் அதை அனுமதிக்கப்போவதில்லை. புலிகளை அழித்தொழிப்பதுதான் ஈழத்தமிழருக்கு சிங்களவரும், இந்தியரும் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. அந்த உதவியை தடுக்க நினைக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டுவங்கி அரசியல் மிகவும் கண்டிக்கத்தது.

Tuesday, October 21, 2008

தேமதுரச் சிங்களம்!

இந்திய மொழிகளிலேயே மலையாளம் கேட்பதற்கு ரம்மியமான மொழி என்பது எனது கருத்து. 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து' என்று பாரதி பாடியதில், 'சுந்தரம்' கர்னாடக இசையைக் குறிப்பதேயன்றி தெலுங்கைக் குறிக்க வாய்ப்பில்லை. மலையாளத்தின் பால் சமஸ்கிரதத்தின் தாக்கம் நாம் அறிந்ததே.



மேலுள்ளது போல், சிங்கள மொழி உச்சரிப்பு இவ்வளவு தூரம் சமஸ்கிரதத்தை ஒத்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. பிரயாசை, நகரம் என்று சொற்களையும் இனங்காண முடிகிறது. ஈழத்தமிழின் ரிங்காரமும் சிங்களத் தாக்கத்தினால் வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. மலையாளமும், சிங்களமும் கிரந்த எழுத்துகள் சார்ந்த எழுத்துமுறையைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நிற்க. தேமதுரச் சிங்களத்தில் விடுதலைப் புலிகள் அடித்து விரட்டப்பட்டு, கிளிநொச்சி மீட்கப்படுகிறது என்ற செய்தியைக் கேட்பதில் சுகமே தனிதான்!

Monday, October 20, 2008

விழிப்புணர்வு!

மார்பகப் புற்றுநோய் பற்றிய 'விழிப்புணர்வும்', அது பற்றிய ஒரு தமிழரின் அலம்பலும் இங்கே! ஹே!

Wednesday, October 08, 2008

இலங்கை: வெற்றியை நோக்கி ...

தமிழக அரசியல் கட்சிகளின் போலி ஒப்பாரிகள், இலங்கையில் 'விடுதலைப் பொறுக்கிகளுக்கு' தர்ம அடி விழுகிறது என்னும் நல்ல செய்தியை உறுதிப்படுத்துகின்றன. மகிழ்ச்சி!

புலிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவம் உதவி வருவது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகளுக்கு நல்ல பிராயச்சித்தார்த்தம். பிரபாகரன் கொல்லப்பட்டு, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டு, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.

இலங்கையில் நிரந்தர அமைதிக்கான பாதையில் அடைய வேண்டிய மைல் கற்கள் கீழே.

1. பிரபாகரன் மரணம்.
2. புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அவர்கள் வசமுள்ள (வன்னி உள்ளிட்ட) அனைத்து பகுதிகளும் மீட்கப்படுதல்.
3. ஐ.நா உள்ளிட்ட சேவை, மறுவாழ்வு அமைப்புகள் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு படிப்படியாகத் திரும்புதல்.
4. வடக்கு மாகாணத் தேர்தல்.
5. இலங்கை அரசியலைமைப்பு சட்டத்தின் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
6. ஈழ மறுசீரமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் உடன்பாடுகள்.
7. எஞ்சியுள்ள புலிகளும் பூண்டோடு அழிக்கப்படுதல் அல்லது போர்க் குற்றங்களுக்காக இலங்கை நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுதல்.
8. இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்புதல்.
9. உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் (விருந்தினராகவேணும்) நாடு திரும்புதல்.
10. சுபம்!