Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts
Tuesday, April 14, 2009
Monday, January 12, 2009
சென்னை புத்தக விழா 2009
சென்னை புத்தக விழாவுக்கு இது 32 ஆவது வருடமாம். நான் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றுவந்தேன். ரொம்ப சுமார்தான்!
தமிழில் இத்தனை பதிப்பகங்கள் எதற்கு இருக்கின்றன என்று விளங்கவில்லை. ஒரே வகையான புத்தகங்களை (பெரும்பாலும் தரமில்லாதவை) பதிப்பித்து இவர்களுக்கு எவ்வாறு போனியாகிறது என்று புரியவில்லை.
விழா அரங்கில் காற்றோட்டமேயில்லாமல் மூச்சு முட்டுகிறது. புத்தகங்களைப் புரட்டிப் படித்து வாங்கிச்செல்பவர்கள் இந்தப் புத்தக விழாவுக்கு வரவேண்டாம்.
பெரும்பாலான கடைகளில் வெகு சில புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கழிவு கேட்பார்களே என்ற பயமா என்று தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் பத்தே புத்தகங்களின் பிரதிகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். அந்தப் பத்தும் 'டாலர் மில்லியனர் ஆவது எப்படி' மாதிரியான லூசுகள் படிக்கும் புத்தகங்களே!
கடைகளில் கிடைக்கும் புத்தகங்களில் கணிசமானவை 'ஆன்மீகப் புத்தகங்கள்' என்ற பெயர்கொண்ட மூடநம்பிக்கைத் திரட்டிகள். பாட்டு பாடினால் சனங்களின் குறைபோக்க 'கடவுள்' என்ன பசு மாடா?
தமிழிலிருந்து கன்னடம் கற்றுக்கொள்ள எதாவது புத்தகம் கிடைக்குமா என்று அலைந்து திரிந்து ஓய்துவிட்டேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கடையில் தொல்காப்பியத்தின் எழுத்து மற்றும் சொல்லதிகாரப் புத்த்கங்களை வாங்கினேன். நல்ல பதிப்பு. வாங்கலாம்.
தமிழில் இத்தனை பதிப்பகங்கள் எதற்கு இருக்கின்றன என்று விளங்கவில்லை. ஒரே வகையான புத்தகங்களை (பெரும்பாலும் தரமில்லாதவை) பதிப்பித்து இவர்களுக்கு எவ்வாறு போனியாகிறது என்று புரியவில்லை.
விழா அரங்கில் காற்றோட்டமேயில்லாமல் மூச்சு முட்டுகிறது. புத்தகங்களைப் புரட்டிப் படித்து வாங்கிச்செல்பவர்கள் இந்தப் புத்தக விழாவுக்கு வரவேண்டாம்.
பெரும்பாலான கடைகளில் வெகு சில புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கழிவு கேட்பார்களே என்ற பயமா என்று தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் பத்தே புத்தகங்களின் பிரதிகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். அந்தப் பத்தும் 'டாலர் மில்லியனர் ஆவது எப்படி' மாதிரியான லூசுகள் படிக்கும் புத்தகங்களே!
கடைகளில் கிடைக்கும் புத்தகங்களில் கணிசமானவை 'ஆன்மீகப் புத்தகங்கள்' என்ற பெயர்கொண்ட மூடநம்பிக்கைத் திரட்டிகள். பாட்டு பாடினால் சனங்களின் குறைபோக்க 'கடவுள்' என்ன பசு மாடா?
தமிழிலிருந்து கன்னடம் கற்றுக்கொள்ள எதாவது புத்தகம் கிடைக்குமா என்று அலைந்து திரிந்து ஓய்துவிட்டேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கடையில் தொல்காப்பியத்தின் எழுத்து மற்றும் சொல்லதிகாரப் புத்த்கங்களை வாங்கினேன். நல்ல பதிப்பு. வாங்கலாம்.
Monday, October 27, 2008
தீபாவளி வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! மகாவீரரின் வாழ்வியல் நெறிகள் நம்மை ஆட்கொள்ளட்டும்!
Wednesday, September 03, 2008
பிகார் வெள்ள நிவாரணம்
பிகார் வெள்ள நிவாரணத்துக்கு நிதியளிக்க விரும்புவர்களுக்கு கீழுள்ள விவரங்கள் பயன்படலாம்.
பிகார் முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கியில் இணையப் பண மாற்றம் செய்யத் தேவையான விவரங்கள்:
CHIEF MINISTER RELIEF FUND,
State Bank of India,
Account Number: 10839124928
Branch: Patna Secretariat, Bihar.
மேலும் விவரங்கள் இங்கே.
அமெரிக்காவில் வசிப்பவர்கள் AID India வின் நிரந்தர நிவாரண நிதிக்கும் பணம் அனுப்பலாம்.
பிகார் முதல்வரின் நிவாரண நிதிக்கு வங்கியில் இணையப் பண மாற்றம் செய்யத் தேவையான விவரங்கள்:
CHIEF MINISTER RELIEF FUND,
State Bank of India,
Account Number: 10839124928
Branch: Patna Secretariat, Bihar.
மேலும் விவரங்கள் இங்கே.
அமெரிக்காவில் வசிப்பவர்கள் AID India வின் நிரந்தர நிவாரண நிதிக்கும் பணம் அனுப்பலாம்.
Saturday, August 16, 2008
தமிழில் உபாகர்மம்!
உபாகர்மம் என்னும் பாரம்பரிய பழக்கத்தை கைவிடாது செய்துவருபவர்களுக்கு எனது பாராட்டுகள். வேத பாடசாலையில் வரும் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் செய்யப்படும் செயல்களுக்கு உபாகர்மம் என்று பெயர். மேலும் விவரங்கள் இங்கே.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரம்மனையும் (Brahman - Cosmic flow), கணபதியையும் (chance, luck) சூரியனையும், மற்றும் பிற இயற்கையின் அங்கங்களையும், வேதம் இயற்றிய, பகுத்தளித்த பெரியோர்களையும் வணங்கும் இந்தப் பழக்கம் மிகவும் சிறப்பானதே. இந்த வழக்கததை தமிழில் செய்ய விரும்புவர்களுக்கு தேவையான குறிப்புகள் கீழே.
கடந்த ஆண்டு காயத்ரி மந்திரம் குறித்து நான் எழுதிய இடுகை இங்கே.
உபாகர்மம் (ஆரம்ப செயல்கள்)
1. காமோகார்ஷீத் ஜபம் (காமன் மன்யு என்னும் தேவதைகளை வேண்டுதல்):
காமனே போற்றி! மன்யுவே போற்றி! (108 தடவை)
2. யஜ்ஞோபவீத தாரணம் (பூணூல் அணிதல்):
2.1. ஆசமனம் (குறியிடுதல்):
அச்சுதனுக்கு வணக்கம், அனந்தனுக்கு வணக்கம், கோவிந்தனுக்கு வணக்கம். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, சிறீதரா, ஹிருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.
உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி என் உடலைனைத்தும் குறி இடுகின்றேன்.
2.2. கணபதி-தியானம்:
எங்கும் நிறைந்தவரும், எனினும் அன்பர்க்குகந்த வடிவம் ஏற்பவரும், வெண்மையான ஆடை உடுத்தவரும். நிலவு போன்ற ஒளியுள்ளவரும், நான்கு கைகளுள்ளவரும், ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக தியானிக்கிறேன்.
2.3. பிராணாயாமம் (மூச்சின் ஆட்சி):
ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே ஸுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி உருவத்தை தியானிப்போம்.
ஓங்காரமே நீரும், ஒளியும், ரசம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும் ஆகும்.
மனம், புத்தி, அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.
2.4. சங்கல்பம் (தெளிந்த தீர்மானம்):
பக்தியோகமும், கர்மயோகமும், ஞானயோகமும் இந்த பூணூலை அணிவதால் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
2.5. யஜ்ஞோபவீதம் (பூணூல் அணிதல்):
பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும், முதன்மையையும் அளிக்கவல்லதுமாகிய வெண்மையான பூணூலைத் தரிக்கிறேன். ஞான ஒளியும், பலமும் அதனால் நிலைபெற வேண்டும்.
2.6. உபவீதம் (பழைய பூணூலைக் கழட்டுதல்):
இழைகள் பின்னமானதும் பலங்குறைந்ததும், அழுக்கடைந்ததுமாகிய பூணூலை விலக்குகிறேன். பரம்பொருளே! மீண்டும் தொடர்ந்து எனக்கு ஞான ஒளியும் நீண்ட ஆயுளும் இருக்கும்படி அருளவேண்டும்.
3. காண்டரிஷி தர்ப்பணம் (வேத கண்ட ரிஷிகளை வணங்குதல்):
பிரஜாபதியின், ஸோமனின், அக்னியின், விச்வ தேவனின், ஸாஹிதீர் தேவனின் (உபநிசத), யாக்ஞீகீர் தேவனின் (உபநிசத), வாருணீர் தேவனின் (உபநிசத), ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவின், ஸ்தஸஸ்பதியின் வேதக் கண்டத்திற்கு உரியவர்களான ரிஷிகளுக்கு இந்த தர்பையை சமர்பிக்கிறேன்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரம்மனையும் (Brahman - Cosmic flow), கணபதியையும் (chance, luck) சூரியனையும், மற்றும் பிற இயற்கையின் அங்கங்களையும், வேதம் இயற்றிய, பகுத்தளித்த பெரியோர்களையும் வணங்கும் இந்தப் பழக்கம் மிகவும் சிறப்பானதே. இந்த வழக்கததை தமிழில் செய்ய விரும்புவர்களுக்கு தேவையான குறிப்புகள் கீழே.
கடந்த ஆண்டு காயத்ரி மந்திரம் குறித்து நான் எழுதிய இடுகை இங்கே.
உபாகர்மம் (ஆரம்ப செயல்கள்)
1. காமோகார்ஷீத் ஜபம் (காமன் மன்யு என்னும் தேவதைகளை வேண்டுதல்):
காமனே போற்றி! மன்யுவே போற்றி! (108 தடவை)
2. யஜ்ஞோபவீத தாரணம் (பூணூல் அணிதல்):
2.1. ஆசமனம் (குறியிடுதல்):
அச்சுதனுக்கு வணக்கம், அனந்தனுக்கு வணக்கம், கோவிந்தனுக்கு வணக்கம். கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, சிறீதரா, ஹிருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.
உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி என் உடலைனைத்தும் குறி இடுகின்றேன்.
2.2. கணபதி-தியானம்:
எங்கும் நிறைந்தவரும், எனினும் அன்பர்க்குகந்த வடிவம் ஏற்பவரும், வெண்மையான ஆடை உடுத்தவரும். நிலவு போன்ற ஒளியுள்ளவரும், நான்கு கைகளுள்ளவரும், ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக தியானிக்கிறேன்.
2.3. பிராணாயாமம் (மூச்சின் ஆட்சி):
ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே ஸுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி உருவத்தை தியானிப்போம்.
ஓங்காரமே நீரும், ஒளியும், ரசம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும் ஆகும்.
மனம், புத்தி, அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.
2.4. சங்கல்பம் (தெளிந்த தீர்மானம்):
பக்தியோகமும், கர்மயோகமும், ஞானயோகமும் இந்த பூணூலை அணிவதால் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
2.5. யஜ்ஞோபவீதம் (பூணூல் அணிதல்):
பரிசுத்தியளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும், ஆதியில் பிரம்மா தோன்றும் போதே அவருடன் தோன்றியதும், ஆயுளையும், முதன்மையையும் அளிக்கவல்லதுமாகிய வெண்மையான பூணூலைத் தரிக்கிறேன். ஞான ஒளியும், பலமும் அதனால் நிலைபெற வேண்டும்.
2.6. உபவீதம் (பழைய பூணூலைக் கழட்டுதல்):
இழைகள் பின்னமானதும் பலங்குறைந்ததும், அழுக்கடைந்ததுமாகிய பூணூலை விலக்குகிறேன். பரம்பொருளே! மீண்டும் தொடர்ந்து எனக்கு ஞான ஒளியும் நீண்ட ஆயுளும் இருக்கும்படி அருளவேண்டும்.
3. காண்டரிஷி தர்ப்பணம் (வேத கண்ட ரிஷிகளை வணங்குதல்):
பிரஜாபதியின், ஸோமனின், அக்னியின், விச்வ தேவனின், ஸாஹிதீர் தேவனின் (உபநிசத), யாக்ஞீகீர் தேவனின் (உபநிசத), வாருணீர் தேவனின் (உபநிசத), ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவின், ஸ்தஸஸ்பதியின் வேதக் கண்டத்திற்கு உரியவர்களான ரிஷிகளுக்கு இந்த தர்பையை சமர்பிக்கிறேன்.
Friday, August 15, 2008
Wednesday, August 06, 2008
Sunday, April 13, 2008
Thursday, November 22, 2007
படம் போடுங்க அண்ணாச்சி!
இன்று அலுவலகத்திலிருந்து திரும்பி வரும்போது தோன்றியது. சென்னை உள்ளிட்ட மாநகரப் பேருந்துகளில் பயணத் தொலைக்காட்சி வைத்து விளம்பரம் செய்யலாமே? (ஏற்கனவே செய்றாங்களா?)
தொலைக்காட்சி நிறுவனங்களை ஏலத்துக்கு அழைத்து, எல்லாப் பேருந்துகளிலும் விளம்பரத் தொலைக்காட்சி வைக்கச்சொன்னால் அரசுக்குப் பணம் கிடைக்குமில்ல? அந்தப் பணத்தில் இன்னும் நிறைய பேருந்து விட்டால் புண்ணியமாப் போகும்.
தொலைக்காட்சி நிறுவனங்களை ஏலத்துக்கு அழைத்து, எல்லாப் பேருந்துகளிலும் விளம்பரத் தொலைக்காட்சி வைக்கச்சொன்னால் அரசுக்குப் பணம் கிடைக்குமில்ல? அந்தப் பணத்தில் இன்னும் நிறைய பேருந்து விட்டால் புண்ணியமாப் போகும்.
Thursday, October 25, 2007
ஆபத்துக்குதவும் தொழில்நுட்பம்...

சான்டியாகோவில் ஆணிபுடுங்கும் எனது நண்பர்கள் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் போரடிக்கும் வேலையில் கொஞ்சம் excitement என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
பி.கு: 1. சத்தியமா சொல்றேன், நான் போனப்ப மலீபு பெருமாள் கோயில் மூடியிருந்தது. அங்க தசரா கொண்டாடுறோம் பேர்வழி என்று நாங்க ஒன்னும் நெருப்பு வைத்து இந்தக் காட்டுத்தீயை ஆரம்பிக்கவில்லை.
பி.கு: 2. நான் நிறைய பாவம் செஞ்சிருக்கிறது உண்மைதான். ஆனா அதுக்காக போன வருடம் நான் லாஸ் ஏஞ்சலீஸ் வந்ததிலிருந்துதான் மழையே பெய்யாமல் பூமி வரண்டு காட்டுத்தீ வந்துட்டதா சொல்றது அபாண்டம்.
Wednesday, August 29, 2007
காயத்ரீ மந்திரம்
ஓம் ! பூர்ப்புவஸ்ஸுவ: | தத்ஸவிதுர்வரேண்யம் | பர்க்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோந: ப்ரசோதயாத் ||
ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தைத் தியானிப்போம்.
We meditate upon the radiant Divine Light of that adorable Sun of Spiritual Consciousness; May it awaken our intuitional consciousness.
காயத்ரீ மந்திரத்திற்கு மேலே உள்ளது போன்ற சிறிய பெரிய அர்த்தங்கள் பல சொல்லப்படுகின்றன. பரமாத்மாவில் (Universal Being) எனக்கு நம்பிக்கை கிடையாது. பகவான் (கடவுள், Personal God) எனக்குத் தேவையில்லை! ஆனாலும் ஆக்கம் (கிரியை, creation) போற்றப்படவேண்டியதுதான். நாம் அறிவையும் உடலையும் வளர்த்துக்கொள்ள சூரிய ஒளி அத்தியாவசியம் என்பது இம்மந்திரத்திலிருந்து பெறத்தக்க குறைந்தபட்ச செய்தி! மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்!
ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தைத் தியானிப்போம்.
We meditate upon the radiant Divine Light of that adorable Sun of Spiritual Consciousness; May it awaken our intuitional consciousness.
காயத்ரீ மந்திரத்திற்கு மேலே உள்ளது போன்ற சிறிய பெரிய அர்த்தங்கள் பல சொல்லப்படுகின்றன. பரமாத்மாவில் (Universal Being) எனக்கு நம்பிக்கை கிடையாது. பகவான் (கடவுள், Personal God) எனக்குத் தேவையில்லை! ஆனாலும் ஆக்கம் (கிரியை, creation) போற்றப்படவேண்டியதுதான். நாம் அறிவையும் உடலையும் வளர்த்துக்கொள்ள சூரிய ஒளி அத்தியாவசியம் என்பது இம்மந்திரத்திலிருந்து பெறத்தக்க குறைந்தபட்ச செய்தி! மேலும் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்!
Thursday, August 23, 2007
நம்ம சென்னை!
சரி, சரி உங்களுக்குத் தெரிந்ததுதான்...இன்று சென்னை தினமாம். அதாவது நாயக்கர்கள் இன்றைய சென்னை மாநகரத்தின் சில பகுதி நிலங்களை ஆங்கிலேயருக்கு ஆகஸ்ட் 22, 1639 இல் விற்றதை சென்னை தினமாக அனுசரிக்கிறார்கள். இதற்காக சென்னை வாரம் என்று சிலபல நிகழ்ச்சிகளுக்கும் எற்பாடு செய்யப்பட்டு நடந்துவருகின்றன. நீங்கள் சென்னையில் இருந்தால் கலந்துகொள்ளுங்களேன்!
சென்னை வாரம் பற்றிய சில பத்திரிக்கை செய்திகள் இதோ...இந்து1, இந்து2, இந்து3, CNN-IBN,
சென்னை வாரம் பற்றிய சில பத்திரிக்கை செய்திகள் இதோ...இந்து1, இந்து2, இந்து3, CNN-IBN,
Thursday, August 16, 2007
கலக்கல் இந்தியா!

ம்... Splendor என்ற வார்த்தைக்கு என்ன தமிழ் சொல் என்று தெரியாததால் இந்த தலைப்பு. நேற்றிரவு எனது வீட்டிற்கு அருகில் நடைபெற்ற India Splendor என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இந்தியில் ஆட்டம் பாட்டும் கொண்டாட்டம்! சோனு நிகம் நன்றாகவே பாடினார். பிபாஷா பாசு (எ) மாமி ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆடினார். லாஸ் ஏஞ்சலீஸிலேயே இருக்கும் ஒரு நடனக்குழு கலக்கினார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தினத்துக்காக நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இலவசமாகக் கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க கசக்குமா என்ன? சுபின் மேத்தா, விக்ரம் சந்திரா, மணிரத்னம், விது வினோத் சோப்ரா உள்ளிட்ட பல பேருக்கு எதோ உருப்படாத விருதெல்லாம் கொடுத்தார்கள். அவர்களில் பலரும் பேசிக் கழுத்தறுத்தார்கள்! மணி 'நன்றி' மட்டும் சொல்லி புண்ணியம் கட்டிக்கொண்டார். இந்தியாவின் 61 ஆவது சுதந்திர தினத்தை உலகிலேயே கடைசியாகக் (பசிபிக் நேரம்) கொண்டாடி மகிழ்ந்தோம்!
Wednesday, August 15, 2007
ஆனந்த சுதந்திரம்!
Sunday, August 12, 2007
நம்பினால் நம்புங்கள்!
சுர்முரி சுட்டிக்காட்டிய நிகழ்படம் கீழே!
இந்த அதிசயத்தை அத்தனைபேர் கூடி நின்று பார்த்தார்கள் என்பது இன்னும் பெரிய ஆச்சரியம்! போன தடவை Yellowstone போனபோது எடுத்த பின்வரும் படங்களை வைத்தே, பல நாட்களுக்கு நாங்கள் scene போட்டுக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!


இந்த அதிசயத்தை அத்தனைபேர் கூடி நின்று பார்த்தார்கள் என்பது இன்னும் பெரிய ஆச்சரியம்! போன தடவை Yellowstone போனபோது எடுத்த பின்வரும் படங்களை வைத்தே, பல நாட்களுக்கு நாங்கள் scene போட்டுக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!



Friday, August 10, 2007
வேணும்டா உனக்கு!
1. நான் விகடன் இணையதளத்தில் சந்தா செலுத்திப் படிக்கிறேன்.
2. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நன்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு அத்தளத்திற்கான எனது மின்னஞ்சல் பயணர் கணக்கையும் கடவுச்சொல்லையும் தெரிவித்திருந்தேன். (தப்புதான்! மன்னிச்சுடுங்க விகடன் தாத்தா!)
3. சில மாதங்களுக்கு முன்பு நான் விகடன் தளத்தில் ஒரு இ-புத்தகத்தை வாங்கியதாகவும் (?!!) அதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது! அந்த நன்பர் எனது கணக்கை இன்னும் பயன்படுத்துகிறாரா என்றே தெரியாததால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
4. நேற்று எனது கடவுச்சொல்லை நான் மறந்து (?!) அதை மாற்றக்கோரியதற்கு இணங்க புதிய கடவுச்சொல் இதுதான் என்று விகடனிடமிருந்து மின்னஞ்சல் வந்தது!
5. இன்று எனது மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே நான் மறந்துவிட்டதாகவும் (?!!), அதை மாற்றக் கோரியதற்கிணங்க, அதற்கான வழிமுறை இதுதான் என்று அந்நிறுவனத்திடமிருந்து வேறோரு முகவரிக்கு மின்னஞ்சல் வருகிறது!
"சும்மா தெருவில் போறவங்களையெல்லாம் பிடித்து இ-தமிழ் படிக்க வைக்கவேண்டும்"னு பதிவாடா போடுற? வேணும்டா உனக்கு!
"நான் விகடன் படிக்கிறேன்" என்று முன்னாடி எழுதிய பதிவைப் படித்த யாரோ ஒருத்தர்தான், இப்போ என் கடவுச்சொல்லை அடைய நினைக்கிறாரோ? நேரடியா கேளுங்கப்பு! நானே காசு கொடுத்து உங்களுக்கு சந்தா வாங்கித்தருகிறேன்.
2. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நன்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு அத்தளத்திற்கான எனது மின்னஞ்சல் பயணர் கணக்கையும் கடவுச்சொல்லையும் தெரிவித்திருந்தேன். (தப்புதான்! மன்னிச்சுடுங்க விகடன் தாத்தா!)
3. சில மாதங்களுக்கு முன்பு நான் விகடன் தளத்தில் ஒரு இ-புத்தகத்தை வாங்கியதாகவும் (?!!) அதை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் என்று எனக்கு மின்னஞ்சல் வந்தது! அந்த நன்பர் எனது கணக்கை இன்னும் பயன்படுத்துகிறாரா என்றே தெரியாததால் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
4. நேற்று எனது கடவுச்சொல்லை நான் மறந்து (?!) அதை மாற்றக்கோரியதற்கு இணங்க புதிய கடவுச்சொல் இதுதான் என்று விகடனிடமிருந்து மின்னஞ்சல் வந்தது!
5. இன்று எனது மின்னஞ்சலின் கடவுச்சொல்லையே நான் மறந்துவிட்டதாகவும் (?!!), அதை மாற்றக் கோரியதற்கிணங்க, அதற்கான வழிமுறை இதுதான் என்று அந்நிறுவனத்திடமிருந்து வேறோரு முகவரிக்கு மின்னஞ்சல் வருகிறது!
"சும்மா தெருவில் போறவங்களையெல்லாம் பிடித்து இ-தமிழ் படிக்க வைக்கவேண்டும்"னு பதிவாடா போடுற? வேணும்டா உனக்கு!
"நான் விகடன் படிக்கிறேன்" என்று முன்னாடி எழுதிய பதிவைப் படித்த யாரோ ஒருத்தர்தான், இப்போ என் கடவுச்சொல்லை அடைய நினைக்கிறாரோ? நேரடியா கேளுங்கப்பு! நானே காசு கொடுத்து உங்களுக்கு சந்தா வாங்கித்தருகிறேன்.
Monday, August 06, 2007
கலக்கிட்டீங்க போங்க!
தமிழ் வலைப்பதிவர் பட்டறையை செவ்வனே நடத்திமுடித்த அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். இது பற்றிய சில பதிவுகள் கிழே.
1. சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?
2. பதிவர் பட்டறை - என் பார்வை..
3. சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!
4. செனனைப் பதிவர் எகஸ்பிரஸ்
செய்திகளில்...
1. இந்தியன் எக்ஸ்பிரஸ்.
2. CNN-IBN.
3. இந்து.
1. சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?
2. பதிவர் பட்டறை - என் பார்வை..
3. சென்னை பட்டறை:- விடுபட்ட.., சொல்லவேண்டிய முக்கியமாக தகவல்!
4. செனனைப் பதிவர் எகஸ்பிரஸ்
செய்திகளில்...
1. இந்தியன் எக்ஸ்பிரஸ்.
2. CNN-IBN.
3. இந்து.
Wednesday, August 01, 2007
பச்சை நிறமே...பச்சை நிறமே...
எனது நன்பர் கவுரவ் சுட்டிக்காட்டிய பக்கம் இங்கே. கலக்கல்! Flickr உலகம் அற்புதமானதென்று எனக்குத் தெரிந்துதான் இருக்கிறது. ஆனால் எனது படங்கள் அசிங்கமாக இருக்கிறதென்கிற தாழ்வுமனப்பான்மையாலும், விரும்புகிற அளவுக்கு நான் பயணிப்பதில்லை என்கிற குற்ற உணர்ச்சியினாலும் நான் அங்கிருந்து விலகியே நிற்கிறேன்! சரி, இழேயுள்ள சிட்டுகளை ரசித்து மனதை தேற்றிக்கொள்கிறேன்...

நன்றி: பார்க்.

நன்றி: கிலினிஷ்.

நன்றி: பார்க்.

நன்றி: கிலினிஷ்.
Saturday, July 14, 2007
தம்பட்டம் ...
Wednesday, May 02, 2007
வலை விடு தூது!
வலைப்பதிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட புலம்பல் என்பதுபோய் இப்போதெல்லாம் சில பதிவுகள் இந்தியாவின் தலைவிதியையே நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டன! நாரயண மூர்த்தி குடியரசுத் தலைவராக வருவதற்கு பெரிய வேட்டு வைத்தது சுர்முரி என்கிற கூட்டுப்பதிவுதான்!
எனக்கு தெரிந்த சில சமூகப்பொறுப்புள்ள பதிவுகளை கீழே தருகிறேன். இப்பதிவுகளில் சில பத்திரிக்கைகளாலும் சேரியமாய் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்கள் தமக்கே உரிய தனித்தன்மையோடு செய்திகளையும் சில சமயம் பிரச்சாரங்களையும் வெளியிடுகிறார்கள்! நீங்கள் இதுபோன்ற பிற உருப்படியான பதிவுகளைப் படித்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.
1. சுர்முரி.
2. தேச நலம்.
3. இந்தியா அண்கட்.
4. ஸ்பார்க்ஸ்.
5. சாஸ்வத்.
6. பத்ரி.
7. ரவி.
8. கிரிஷ்.
எனக்கு தெரிந்த சில சமூகப்பொறுப்புள்ள பதிவுகளை கீழே தருகிறேன். இப்பதிவுகளில் சில பத்திரிக்கைகளாலும் சேரியமாய் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவர்கள் தமக்கே உரிய தனித்தன்மையோடு செய்திகளையும் சில சமயம் பிரச்சாரங்களையும் வெளியிடுகிறார்கள்! நீங்கள் இதுபோன்ற பிற உருப்படியான பதிவுகளைப் படித்தால் எனக்குத் தெரியப்படுத்தவும்.
1. சுர்முரி.
2. தேச நலம்.
3. இந்தியா அண்கட்.
4. ஸ்பார்க்ஸ்.
5. சாஸ்வத்.
6. பத்ரி.
7. ரவி.
8. கிரிஷ்.
Subscribe to:
Posts (Atom)