Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Sunday, April 06, 2008

பாரதியின் கடிதங்கள்!

இந்து நாளிதழின் ஆசிரியருக்கு பாரதியார் எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே படிக்கலாம்.

Friday, April 04, 2008

ஒகேணக்கல் பிரச்சனையில் தமிழரின் சிறுபிள்ளைத்தனம்!

ம்... என்னை தமிழ் விரோதி என்று கட்டம் கட்டுபவர்கள் இதையும் படியுங்கள்.

1. பெங்களூரில் சில திரையரங்குகளை சில முட்டாள்கள் தாக்கினார்கள் என்றால் அதற்கெல்லாம் தமிழ் திரைத்துறையினர் உண்ணாவிரதம் இருக்கவேண்டுமா? இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?
2. எதோ தென்னிந்திய திரைத்துறையினர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதாம். அதிலிருந்து கர்நாடக மாநிலத்தவரை இடைநீக்கம் செய்துவிட்டார்கள். நாம் மற்றவர்களை இனவெறியர் என்று சொல்லிக்கொள்கிறோம்! விந்தை.
3. கன்னடர்களின் உணவகங்கள் தாக்கப்படுவது, கர்நாடக பேருந்துகள் தாக்கப்படுவது என்று மிகவும் கேவலமாக நிலைக்கு தமிழகம் ஏன் சென்று கொண்டிருக்கிறது? இதையெல்லாம் கண்டிப்பது மற்ற தமிழரின் கடமையல்லவா?
4. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டக்கூடாது என்று தமிழக கட்சிகள் போராடவில்லையா? அதேபோல சில கன்னட அமைப்புகள் போராடினால் போராடிக்கொள்ளட்டுமே. கடைசியில் அரசுகளும், நீதிமன்றங்களும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளுக்கு எதற்கு பொதுமக்கள் அலட்டிக்கொள்ளவேண்டும்?
5. பாலக்காடு தொடர்வண்டி மண்டலத்தை பிரித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நாம் 'விட்டுக்கொடுத்தல்' பற்றி மற்றவர்களுக்கு பாடம் நடத்தமுடியுமா?
6. கருணாநிதி என்கிற கிழவன் தேவையில்லாமல் எரிந்துவிழுந்து தமிழ்நாட்டுக்கு குந்தகம் விளைவித்து வருவதை பத்திரிக்கைகள் ஏன் கண்டுகொள்வதில்லை? இராமர் பற்றி தேவையில்லாமல் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைக் கெடுத்தது யார்? ஒகேணக்கல் பற்றி ஒரு சென்னை விழாவில் குடிகாரன் மாதிரி பேசி கன்னடர்களை கிழப்பிவிட்டது யார்?