Showing posts with label பசுமை. Show all posts
Showing posts with label பசுமை. Show all posts

Tuesday, July 08, 2008

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ...

உலகத் தலைவர்கள் எல்லோரும் வயிறு முட்ட சாப்பிடுவோம்! ஜப்பானில் கூடியிருக்கும் ஜி-8 நாடுகளின் தலைவர்கள், மன்மோகன் சிங் உள்ளிட்ட வேறு ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஆகியோர், உலக உணவுப் பற்றாக்குறை, உலக வெம்மை போன்ற விசயங்களை விவாதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நேற்றைய உணவுப் பட்டியல் கீழே!


18 வகையான பண்டங்களை, அதுவும் அசைவ உணவு. பால் உள்ளிட்ட இயற்கைக்குப் புறம்பான, ஈவிறக்கமற்ற உணவுகளை பதம் பார்த்துவிட்டு இவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள்? இந்த தலைவர்களின் வீண் ஆடம்பரம் எதற்காக? இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாகத்தானே இங்கு கூடியிருக்கிறார்கள்?

மரக்கறி (உருளை, வெங்காயம், கேரட்...) தவிர்த்த காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட தாணியங்கள் ஆகியவை கொண்டே மனிதன் திடமாக, ஆரோக்கியமாக வாழமுடியும். ஒரு ஆடோ, கோழியோ தன் வாழ்நாள் முழுதும் சாப்பிட்ட உணவுக்கு ஈடானதை ஒவ்வொரு உணவு வேலையிலும் மனிதன் சாப்பிட்டால், இந்த பூமி தாங்குமா?

படம், செயதி நன்றி: டெய்லி மெயில். ஹஃப்பிங்டன் போஸ்ட்.

Friday, March 14, 2008

தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு!

ம்... ஈழத்தமிழரை அழித்தொழிக்கும் அந்த கெட்ட புலிகள் அல்ல! தமிழகக் காடுகளில் உலவும் நல்ல புலிகளைத் தான் சொல்கிறேன். இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து சுமார் 1400 புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக சமிபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு வேளை புலிகளைக் காப்பற்றும் முயற்சிகள் வேலை செய்ய ஆரம்பித்திருக்கலாம். தமிழகத்தில் தற்போது சுமார் 65-86 புலிகள் மீதமிருப்பதாகத் தெரிகிறது. இது பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய செய்தியில்லை என்றாலும் இருந்த புலிகளும் அழிந்தன என்று செய்தி வராமல் இருப்பதே பெரிய விசயம்.

புலிகள் விசயத்தில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இங்கேயும் வாங்க -> புலிகள் திட்டம், உலக வனவிலங்கு ஆணையத்தின் கையெழுத்து இயக்கம்.

அப்புறம், எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்க்கூட்டிலும், யூடூபிலும் பழியாய் கிடப்பீங்க. Connet2Earthத்துக்கும் வாங்க!

Thursday, February 07, 2008

அகிம்சை பட்டு

பட்டுப் புடவைகள்/வேட்டிகள் எவ்வளவு கொடூரமானவை என்று என்னுடைய இந்த ஆங்கில இடுகையில் எழுதியிருந்தேன். ஒரு பட்டுப்புடவை தயாரிக்க சுமார் 1500 பட்டுப் புழுக்கள் கொதிக்கின்ற வெந்நீரில் வேகவைக்கப்படும் அநியாயத்தை என்னவென்று சொல்வது? கடவுள் சிலைகளும் கன்னிப் பெண்களும் பட்டுத்துணி உடுத்தி வந்தால், ரசிப்பதா?! வெறுப்பதா?

இந்தக் கொடூரத்துக்கு சிறந்த மாற்று, பட்டுத் துணிகளையே அணியாமல் இருப்பதுதான்! மாற்றுத் துணிக்கே வழியில்லாமல் கஷ்டப்படும் மக்களிருக்க பட்டு என்னும் ஆடம்பரம் எதற்கு? அப்படியே அணிந்துதான் ஆகவேண்டுமென்றால் 'அகிம்சை பட்டு' என்னும் துணிகளை அணியலாம். பட்டுப் புழுக்கள் தாமே துறக்கும் கூடுகளிலிருந்து இந்தப் பட்டுத்துணிகள் தயாரிக்கப் படுகின்றனவாம்.

இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி இங்கே. சென்னை பூம்புகார் அங்காடியில் அகிம்சை பட்டு விற்கப்படுவது குறித்து போன வருடம் வந்த இந்து நாளிதழ் செய்தி இங்கே.

Tuesday, October 30, 2007

மக்கள் தீர்ப்பே...

ஜனாதேஷ் (மக்கள் தீர்ப்பு) என்னும் இயக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது! சமீபத்தில் சுமார் 25000 நிலமற்ற விவசாயிகள் (தலித்துகள்?) மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரிலிருந்து தில்லிக்கு நடந்தே வரும் சத்தியாகிரகம் செய்து அசத்தியிருக்கிறார்கள். இன்று இந்தியாவெங்கும் நிலமே பெரும் பிரச்சனையாகி வருவது நாம் அறிந்ததே.

தூத்துக்குடியிலிருந்து நந்திகிராம் வரை வெடித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கும், நாடேங்கும் பரவிவிட்டிருக்கும் நக்ஸல்வாதத்திற்கும் அடிப்படைக் காரணம் விவசாயிகளின் நில உரிமைப் பிரச்சனைகளே. ஆனால் நம்மில் பலருக்கு விசயத்தின் தீவிரம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஏக்தா பரிஷ்த் என்னும் அமைப்பு இந்தியாவின் ஏழை விவசாயிகள், தன்னார்வளர்கள் துணையோடு இந்த ஜனாதேஷ் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பாராட்டவேண்டிய, சிந்திக்கவேண்டிய விசயம்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் இங்கே. நிதின் சுட்டிக்காட்டிய 'தேசிய நிலக் கொள்கை' இங்கே.

Tuesday, October 09, 2007

வேதனை வென்ற கணம்..

...விவசாயி உயிரை மாய்த்த கணம், நம் இந்தியா தோற்கும் அதே கணம். 8 மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தியா தோற்பதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களில் நான் காபிக்கு செலவழித்த பணம் சிலரின் கடன்களை அடைக்கப் போதுமாயிருந்திருக்கும்...

காந்தி ஜெயந்தியன்று AID India அமைப்பு நடத்திய தீபாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது திரையிடப்பட்ட 'The Dying Fields' விவரணப்படத்தை பார்த்தேன்.

இந்திய விவசாயப் பேரழிவு குறித்து இங்கு படிக்கலாம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமருக்கு இங்கு வேண்டுகோள் விடுக்கலாம். விவசாயிகள் மாண்டுகொண்டிருக்க யுவராஜ் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த விவசாய அமைச்சர்/கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரத் பவார் குறித்து சோசிக்கலாம்...

Wednesday, September 12, 2007

வாழ்வா சாவா?


IUCN என்கிற 'உலக இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு' அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. நீங்களும் நானும் செய்யும் அட்டுழியங்களால் புல்், பூண்டு, பூச்சிகளென உயிரினங்கள் முற்றிலுமாய் அழிந்துகொண்டிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

உயிர்வலி எண்ணிக்கையில்...

16,306 - IUCN கணக்கெடுப்பில் அழிந்துகொண்டிருப்பதாக அறியப்பட்ட உயிரினங்கள்.
7850 - விலங்கினங்கள்்.
8456 - பறவையினங்கள், மற்றவை.
12%-52% - பெரிய உயிரினங்களில் அழிந்துகொண்டிருப்பவைகளின் சதவீதம்.
8% - பறவையினங்கள். (8 இல் 1)
22% - பாலூட்டிகள். (4 இல் 1)
31% - நீர் மற்றும் நிலத்தில் வாழ்பவை - Amphibians (3 இல் 1)
43% - ஆமை வகைகள்.
28% - Conifers என்கிற மரங்கள்.
52% - Cycads என்கிற செடிகள்.


பட விளக்கம்: காசிக்குப் போய் பாவத்தை கழுவினார்களோ இல்லையோ கங்கையை அசுத்தப்படுத்தி, அதன் மூலம் கரியால் என்கிற முதலையினத்தையே அழித்து மேலும் பாவம் செய்தனர் எம் மக்கள்!

படம் நன்றி: G. & H. Denzau.

Thursday, July 19, 2007

கொஞ்ச நாள் பொறு தலைவா...

... அந்த அலாஸ்கா வஞ்சிக்கொடி தேடிவருவா! Greenpeace இயக்கத்தைச் சேர்ந்த ஜான் தனது நன்பர்களுடன் அலாஸ்காவின் பெர்ரிங் கடலில் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். அக்குழுவினர் இங்கே அதைப்பற்றி பதிவெழுதுகிறார்கள். அவர்கள் கப்பலிலிருக்கும் வலைப்படக் கருவியின் நேரடி படங்கள் இங்கே. ம்...பொறாமையாக இருக்கிறது. ஆனால் இது சரி செய்யக்கூடியதுதான். வருகிற செப்டம்பரில் நானும் அலாஸ்கா சுற்றிப்பார்க்க செல்கிறேனாக்கும்!

என்னாது?!! நீங்க Greenpeace உறுப்பினர் இல்லையா?!

Saturday, July 07, 2007

ஹே யூ!

உலகெங்கும் இன்று (07/07/07) நடக்கும் லைவ் எர்த் கச்சேரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். கச்சேரிகளை நேரடியாகக் காண இங்கே செல்லவும். (IE உலாவி கேட்கும் அத்தளத்திற்காக வருந்துகிறேன்).

Tuesday, February 13, 2007

பசுமை விகடன்

விகடன் குழுமம் ஆரம்பித்திருக்கும் 'பசுமை விகடன்' பத்திரிக்கை மிகவும் வரவேற்கத்தகுந்த முயற்சியாகும். விவசாயத்திற்கும் எனக்கும் மிகவும் தூரமென்றாலும் விரும்பிப்படிக்கிறேன். சுற்றுலா, விவசாய வரலாறு மற்றும் துணுக்குகள் பகுதிகள் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கின்றன.

"சினிமாக்காரி படம் போட்டு ஆனந்த விகடன் குட்டிச்சுவராப் போச்சு!" என்று என் பாட்டி அங்கலாய்த்தாலும் விகடனை வாரம் தவறாமல் படிக்கிறேன். சில காலமாக வரும் 'வெளிச்சம்: உலக சினிமா' பகுதி சிறப்பாகவுள்ளது. நேரமிருந்தால் நான் சமீபத்தில் ரசித்த பின்வரும் படங்களை நீங்களும் பாருங்களேன்!

1. சில்ரன் ஆப் ஹெவன்.
2. தி ரிடர்ன்.
3. தி குக்கூ.
4. மூன்று நிறங்கள்: நீலம்.