Monday, January 12, 2009

சென்னை புத்தக விழா 2009

சென்னை புத்தக விழாவுக்கு இது 32 ஆவது வருடமாம். நான் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றுவந்தேன். ரொம்ப சுமார்தான்!

தமிழில் இத்தனை பதிப்பகங்கள் எதற்கு இருக்கின்றன என்று விளங்கவில்லை. ஒரே வகையான புத்தகங்களை (பெரும்பாலும் தரமில்லாதவை) பதிப்பித்து இவர்களுக்கு எவ்வாறு போனியாகிறது என்று புரியவில்லை.

விழா அரங்கில் காற்றோட்டமேயில்லாமல் மூச்சு முட்டுகிறது. புத்தகங்களைப் புரட்டிப் படித்து வாங்கிச்செல்பவர்கள் இந்தப் புத்தக விழாவுக்கு வரவேண்டாம்.

பெரும்பாலான கடைகளில் வெகு சில புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கழிவு கேட்பார்களே என்ற பயமா என்று தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் பத்தே புத்தகங்களின் பிரதிகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். அந்தப் பத்தும் 'டாலர் மில்லியனர் ஆவது எப்படி' மாதிரியான லூசுகள் படிக்கும் புத்தகங்களே!

கடைகளில் கிடைக்கும் புத்தகங்களில் கணிசமானவை 'ஆன்மீகப் புத்தகங்கள்' என்ற பெயர்கொண்ட மூடநம்பிக்கைத் திரட்டிகள். பாட்டு பாடினால் சனங்களின் குறைபோக்க 'கடவுள்' என்ன பசு மாடா?

தமிழிலிருந்து கன்னடம் கற்றுக்கொள்ள எதாவது புத்தகம் கிடைக்குமா என்று அலைந்து திரிந்து ஓய்துவிட்டேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கடையில் தொல்காப்பியத்தின் எழுத்து மற்றும் சொல்லதிகாரப் புத்த்கங்களை வாங்கினேன். நல்ல பதிப்பு. வாங்கலாம்.

No comments: