Sunday, August 31, 2008

பெங்களூரில் பெர்க்மன் வாரம்!

இங்க்மார் பெர்க்மன் நினைவு திரைப்பட வாரம் பெங்களூரில் இன்று துவங்கியது. சுஜித்ரா திரைப்பட சமூகத்தின் திரையரங்கில் வைல்டு ஸ்டராபரீஸை மீண்டும் பார்த்து ரசித்தேன். ஸ்வீடன் தூதரகம் மற்றும் பாலடோர் திரைப்பட நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த திரைப்பட வாரம் நடைபெறுகிறது. வருகிற சனிக்கிழமை முடிவடையும்.

வைல்டு ஸ்டராபரீஸுக்கெல்லாம் விமர்சனம் எழுதவேண்டிய அவசியமிருப்பதாய் தெரியவில்லை. கடந்த ஆண்டு மறைந்த பெர்க்மனின் படங்களிலேயே மிகவும் இலகுவான படம். நான் பார்த்த அதிசிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள படம்! அவ்வளவுதான்.

வரும் மாதத்தில் நிகழவிருக்கிற இரண்டு திரைப்பட விழாக்கள் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 'தண்ணீரிலிருந்து எழும் ஒலிகள்' என்னும் தண்ணீர் பற்றிய விவரண திரைப்பட விழா மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டம் செப்டம்பர் 13 அன்று துவங்குகிறது.

லூமியர் கொண்டாடங்கள் என்னும் அமைப்பு நடத்தும் மலையாள திரைப்படத் திருவிழா செப்டம்பர் 19 அன்று துவங்குகிறது. லாவண்யா திரையரங்கில் நாலு பெண்கள், மரண சிம்மாசனம் உள்ளிட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.

No comments: