Wednesday, August 20, 2008

மாமல்லர்கள்!

1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சுஷீல் குமாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள விஜேந்திர குமாருக்கு பாராட்டுகளும், அவர் வெண்கலத்தோடு நில்லாமல் தங்கமோ, வெள்ளியோ பெற வாழ்த்துகள்!

விஜேந்திர குமார் மற்றும் காலிறுதி வரை முன்னேறி, போராடித் தோற்ற அகில் குமார், ஜிதேந்தர் குமார் என்னும் மூன்று வீரர்களை நாட்டுக்கு அளித்த பிவானிக்கு ஒரு ஓ போடலாம்!

பேட்மிண்டன் விளையாட்டில் சிறப்பாக விளையாடிய சாய்னா நேஹ்வால் பிற்காலத்தில் பதக்கங்களையும் வென்றுவருவார் என நம்பலாம். பறக்கும் இறக்கைகளைக் கொண்ட இந்த விளையாட்டு பேட்மிண்டன் வீடு என்னும் இடத்தின் பெயரால் அழைக்கப் படுவது சுவாரசியமான விசயம்!

கடைசியாக, அப்கானிஸ்தானின் ரோஹுல்லாஹ் நிக்பாய் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. பாராட்டுகள்!

No comments: