Tuesday, March 04, 2008

கிரிக்கெட் என்னும் அரக்கன்!

கிரிக்கெட் என்னும் விளையாட்டு இரண்டு வேலை உணவுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடும் கோடிக்கணக்கானோரின் முகத்தில் பூசப்படும் கரியாகி வருகிறதா? Cricinfo வில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை சிந்திக்கத் தக்கது.

ஆறு பந்தில் சிக்ஸர் அடித்ததற்காக யுவராஜ் சிங்கிற்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்தது. சும்மா ஒரு மூன்று நாடுகள் போட்டியில் நேற்று வென்றதற்கே பத்து கோடி உரூபாய் பரிசு அறிவித்திருப்பது. பத்து காசு கேட்டு குழந்தையுடன் பிச்சை எடுக்கும் சிறுமிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்படும் மும்பை நகரின் மற்றொரு பகுதியில் பல கோடி உருபாய்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஏலமிடப்படுவது, அது பெருமையாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் யாராவது இன்னும் இருந்தால், இந்த capitalist கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். ஒரு சின்ன யோசனை. வருகிற ஏப்ரல் மே மாதங்களில் நடக்கவிருக்கும் IPL என்னும் அசிங்கத்தை புறக்கணிப்போம்! அதன் மூலம் நாம் சேமிக்கும் மின்சாரம், மைதான சீட்டு பணம், நமது நேரம் ஆகியவற்றுக்கு ஈடான ஒரு தொகையை, ஸ்டீவ் வாவ் பிரபலப்படுத்திய உதயன் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவோம்.

No comments: