Tuesday, October 09, 2007

வேதனை வென்ற கணம்..

...விவசாயி உயிரை மாய்த்த கணம், நம் இந்தியா தோற்கும் அதே கணம். 8 மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தியா தோற்பதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களில் நான் காபிக்கு செலவழித்த பணம் சிலரின் கடன்களை அடைக்கப் போதுமாயிருந்திருக்கும்...

காந்தி ஜெயந்தியன்று AID India அமைப்பு நடத்திய தீபாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது திரையிடப்பட்ட 'The Dying Fields' விவரணப்படத்தை பார்த்தேன்.

இந்திய விவசாயப் பேரழிவு குறித்து இங்கு படிக்கலாம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமருக்கு இங்கு வேண்டுகோள் விடுக்கலாம். விவசாயிகள் மாண்டுகொண்டிருக்க யுவராஜ் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த விவசாய அமைச்சர்/கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரத் பவார் குறித்து சோசிக்கலாம்...

No comments: