Tuesday, July 08, 2008

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ...

உலகத் தலைவர்கள் எல்லோரும் வயிறு முட்ட சாப்பிடுவோம்! ஜப்பானில் கூடியிருக்கும் ஜி-8 நாடுகளின் தலைவர்கள், மன்மோகன் சிங் உள்ளிட்ட வேறு ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஆகியோர், உலக உணவுப் பற்றாக்குறை, உலக வெம்மை போன்ற விசயங்களை விவாதிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நேற்றைய உணவுப் பட்டியல் கீழே!


18 வகையான பண்டங்களை, அதுவும் அசைவ உணவு. பால் உள்ளிட்ட இயற்கைக்குப் புறம்பான, ஈவிறக்கமற்ற உணவுகளை பதம் பார்த்துவிட்டு இவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள்? இந்த தலைவர்களின் வீண் ஆடம்பரம் எதற்காக? இவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதிகளாகத்தானே இங்கு கூடியிருக்கிறார்கள்?

மரக்கறி (உருளை, வெங்காயம், கேரட்...) தவிர்த்த காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட தாணியங்கள் ஆகியவை கொண்டே மனிதன் திடமாக, ஆரோக்கியமாக வாழமுடியும். ஒரு ஆடோ, கோழியோ தன் வாழ்நாள் முழுதும் சாப்பிட்ட உணவுக்கு ஈடானதை ஒவ்வொரு உணவு வேலையிலும் மனிதன் சாப்பிட்டால், இந்த பூமி தாங்குமா?

படம், செயதி நன்றி: டெய்லி மெயில். ஹஃப்பிங்டன் போஸ்ட்.

No comments: