Friday, January 02, 2009

ஈழம் கொண்டான்!

தீவிரவாதிகளிடமிருந்து கிளிநொச்சி மீட்கபட்ட செய்தி இனிய புத்தாண்டுப் பரிசாய் வந்திருக்கிறது! மகிழ்ச்சி.

இந்த வெற்றியை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது குறித்து மேலும் மகிழ்ச்சி. ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னிப் பகுதிகள் அனைத்துமென்று படிப்படியாய் மேலும் பல வெற்றிகள் குவிக்க இலங்கைக்கு எனது வாழ்த்துகள்.

மகிந்தா ராஜபக்சே போன்று சொன்னதை செய்து காட்டும் திடமான தலைவர்கள் கிடைத்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உலகம் வெற்றிபெறமுடியும். ராஜபக்சே தலைமையில் இலங்கை உன்னத நிலையை அடையுமென்று நம்பலாம்.

புலிகளின் தமிழக இனவெறி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்களுக்குக் கிடைத்திருக்கும் சமீபத்திய செறுப்படியின் வலி மறைவதற்குள் இலங்கைத் தமிழர்கள் குறித்த உங்களுடைய நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிரையும் நல்வாழ்வையும்விட உங்களின் இனவெறிக் கனவு முக்கியமானதா?

No comments: