Sunday, December 02, 2007

பள்ளிக்கூடம் போகாமலே ...

இருக்கமுடியாது! படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிய அல்லது பள்ளிக்கே போகாத சிறார்களை பள்ளிக்கு அழைத்துவர ஒரு உன்னதமான திட்டம் உருவாகியிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்காணித்து, அவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை முடிந்தவரையில் போக்கி, அந்தக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர முயன்று வருகிறார்கள்.

அதுவும் தொழில்நுட்ப உதவியுடன். back2school.in என்னும் இணையதளத்தின் மூலம் அந்தச் சிறார்களை கண்காணிக்கிறார்கள். கலக்கல்! மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், தமிழக அரசு உதவியுடன் இந்தத் திட்டத்தை செவ்வனே செய்துவரும் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் பாபு, தன்னார்வளர்கள், பள்ளி ஆசிரியர்கள், இந்தத் தளத்தை உருவாக்கிய ஆர்பிடர் இன்போடெக் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

இது பற்றிய பத்திரிக்கை செய்திகள் இங்கே மற்றும் இங்கே. நான் ஏற்கனவே எழுதியிருந்த படிக்கும் இனிக்கும் இயக்கமும் இத்திட்டத்தோடு ஒன்றிணைந்ததுதான்.

No comments: