Wednesday, February 04, 2009

கற்றளி கோயில்கள் அறநிலையத்துறை வசம் வரவேண்டும்!

சிதம்பரம் நடராசர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என்று சமீபத்தில் வந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கற்றளியாயிருக்கும் எல்லா புராதனக் கோயில்களையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேன்டும்.

பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்கள்மீது ஒரு சிலர் உரிமை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்தக் கோயில்களில் மிகவும் அரிதானவற்றை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கவேண்டும். திருவண்ணாமலையில் நிகழ்ந்தது போன்று சில பெருச்சாலிக்கூட்டங்கள் சேர்ந்து தடைசெய்வதை அனுமதிக்கக்கூடாது.

கோயில் அர்ச்சகர் நியமனத்தில் சீர்திருத்தம் இன்னும் பேச்சளவிலேயே இருக்கிறது. இதுகுறித்து சில ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு இங்கே. சிவன், முருகன், அம்மன், அனுமார் கோயில்களில் பெரும்பாலானவற்றில் பிராமணர் அல்லாதவரே அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்.

பெருமாள் கோயில்களில் வைஷ்ணவர்கள் (ஐயங்கார்) நியமிக்கப்படலாம். ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம். ஆனால் மொத்தப் பணியிடங்களில் பிராமணர் எண்ணிக்கை சுமார் 10 சதவீதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மேலும் தங்கள் வீட்டுக் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த பிராமணரை அழைக்கும் அசிக்கத்தை தமிழகத்தார் முதலில் நிறுத்தவேண்டும். சம்பந்தமேயில்லாமல் பிராமணரை அழைக்கும் இவர்கள் முஸ்லீம் முல்லாக்களை ஏன் அழைப்பதில்லை என்று புரியவில்லை. ஆச்சாரிகள் உள்ளிட்ட சமூகத்தார் இது போன்று ஆரிய மோகம் கொண்டு அலைவதில்லை. வேத மதத்தின் சடங்குகளை பாதுகாக்கும் பொறுப்பு பிராமணருக்கு மட்டும் இருந்தால் போதுமானது.

மேலும் வேத மதத்துச் சடங்குகளை தமிழில் மட்டுமே செய்யவேண்டும் என்று கோரும் லூசுகளின் கோரிக்கைகளையும் நிராகரிக்கவேண்டும். அர்ச்சகருக்கு தமிழில் தெரிந்தால் செய்யட்டும். மற்றபடி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆகமங்களையும், மந்திரங்களையும் நாம் காப்பாற்றாவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்கள்? வேத மதத்தார் தமிழில் எழுதியிருக்கும் பக்திப் பாடல்களை பிராமண அர்ச்சகர்கள் தேவையான அளவு பாடுகிறார்கள். அதுவே போதுமானது.

2 comments:

Anonymous said...

Well Said, But in many temples under the control of "aranilaiyathurai" many sculptures and murals have been vanished! So everything in a temple shall be documented and verified atleast in a year.

Anonymous said...

I would like to talk to you by phone. If you don't mind can you leave your contact number, please?