Tuesday, July 10, 2007

அனுராதா, என் தேவதையே!

பூனைக்கு மணி கட்டுவது யாரு? அதாவது ரஜினி, தமிழ் சினிமாவின் மிகப்பெரும் வெட்கக்கேடு என்னும் உன்மையை யார் எடுத்துச் சொல்வது? தமிழனின் கண்மூடித்தனமான சினிமா வெறியில் பணம் செய்து திண்றுகொண்டிருக்கும் உதவாக்கரைகள் ரஜினி, சங்கர் போன்றோரை யார் தோலுரித்துக்காட்டுவது? இதை செவ்வனே செய்த அனுராதாவுக்கு (பகுதி 1, பகுதி 2) எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

அனுராதா சொல்வதுபோல் ரஜினி என்ற மனிதன் நல்லவராக இருக்கலாம். இல்லாவிட்டாலும் (புகைக்கு அடிமையானவர் ஆன்மீகவாதியாம்!) அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் நடிகனாக அவர் விமர்சனத்திற்கு உரியவரே. சிவாஜிராவும், (pre 1990) ரஜினிகாந்தும் ஜெயித்துவிட்டார்கள். சூப்பர் ஸ்டார் அசிங்கமாகத் தோற்றதோடு மட்டுமில்லாமல் தனது சாக்கடை உலகத்து தமிழ் சினிமாவையும் இழுத்துச் சென்றிருக்கிறார். என்று தணியும் இந்த கேவல மோகம்?

No comments: