அதற்கு முந்தைய வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கும், சரசுவதி மகால் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றிருந்தேன். மிக்க மனநிறைவளித்த பயணமென்றாலும் இரண்டு விசயங்கள் நெருடச்செய்தன.
1. வேலூர் கோட்டையிலுள்ள அகழியைக்கூட ஓரளவுக்குப் பராமரிப்பவர்கள் பெரிய கோயில் அகழியை சீரழித்தது ஏனென்று தெரியவில்லை. அங்கே உள்ளேயிருப்பது முன்னால் இந்தியப் பிரதமரைக் கொன்ற அதிமுக்கியமானவர்கள், இங்கிருப்பதோ உதவாக்கரை சிவன் மட்டும்தான் என்பதாலா?

2. சரசுவதி மகால் நூலகத்திலிருக்கும் ஓலைச்சுவடிகள் மிகவும் அரிய செல்வங்களென்றாலும், இந்த சிறிய நூலகத்தைப் பற்றியா இவ்வளவு தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்? சப்பென்றாகிவிட்டது!
No comments:
Post a Comment