Saturday, March 24, 2007

ஆசிய நாகரீகங்கள் அருங்காட்சியகம்

சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தபோது அங்குள்ள ஆசிய நாகரீகங்கள் அருங்காட்சியகத்தைப் போய் பார்த்தேன். அருங்காட்சியகம் என்றாலே போரடித்து தும்ம வைக்குமிடமென்றில்லாமல் நேர்த்தியாகவும் நவினமாகவும் இருந்தது. சிங்கப்பூர் செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்.

அதற்கு முந்தைய வாரம் தஞ்சை பெரிய கோயிலுக்கும், சரசுவதி மகால் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றிருந்தேன். மிக்க மனநிறைவளித்த பயணமென்றாலும் இரண்டு விசயங்கள் நெருடச்செய்தன.

1. வேலூர் கோட்டையிலுள்ள அகழியைக்கூட ஓரளவுக்குப் பராமரிப்பவர்கள் பெரிய கோயில் அகழியை சீரழித்தது ஏனென்று தெரியவில்லை. அங்கே உள்ளேயிருப்பது முன்னால் இந்தியப் பிரதமரைக் கொன்ற அதிமுக்கியமானவர்கள், இங்கிருப்பதோ உதவாக்கரை சிவன் மட்டும்தான் என்பதாலா?



2. சரசுவதி மகால் நூலகத்திலிருக்கும் ஓலைச்சுவடிகள் மிகவும் அரிய செல்வங்களென்றாலும், இந்த சிறிய நூலகத்தைப் பற்றியா இவ்வளவு தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம்? சப்பென்றாகிவிட்டது!

No comments: