இனவெறி காரணமாக புலிகளை ஆதரிக்கும் இந்தியத் தமிழர்கள், தேசியம் போற்றும் இலங்கைத் தமிழரின் கருத்துகளையும் கேட்டறிவது நல்லது. அதற்கு பின்வரும் இணையதளங்கள் உதவியாகயிருக்கும்.
1. தேனீ.
2. அதிரடி.
3. நெருப்பு.
4. இலங்கை.நெட்
5. மீன்மகள்.
6. இலக்கு.
7. நிதர்சனம்.
8. முழக்கம்.
Monday, January 19, 2009
Sunday, January 18, 2009
பிரபாகரனின் பொந்து
பிரபாகரன் என்கிற பெருச்சாலி தர்மாபுரத்தில் பயன்படுத்தி வந்த 'பதுங்கு குழி'யின் படங்களை இராணுவம் வெளியிட்டுள்ளது. இங்கே.
Saturday, January 17, 2009
ஈழம் என்ற ஒரு நாடே இல்லை! -- ஜெயலலிதா.
"ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்." -- ஜெயலலிதா.
வாவ்! இதுவல்லவா பேட்டி. ஓட்டுக்காகவும், புலிகளிடமிருந்து கிடைக்கும் பணத்துக்காகவும் உண்மையை விலைபேசும், இனவெறி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையாகப் பேசும் ஜெயலலிதா பாராட்டப்பட வேண்டியவர்.
பி.கு: 1996 தேர்தலில் அதிமுக அரசை வெளியேற்ற நான் திமுகவிற்கு தேர்தல் வேலை செய்திருக்கிறேன். மற்றபடி தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது. திமுக, அதிமுக இரண்டுக்குமே நான் வெவ்வேறு தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன்.
வாவ்! இதுவல்லவா பேட்டி. ஓட்டுக்காகவும், புலிகளிடமிருந்து கிடைக்கும் பணத்துக்காகவும் உண்மையை விலைபேசும், இனவெறி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையாகப் பேசும் ஜெயலலிதா பாராட்டப்பட வேண்டியவர்.
பி.கு: 1996 தேர்தலில் அதிமுக அரசை வெளியேற்ற நான் திமுகவிற்கு தேர்தல் வேலை செய்திருக்கிறேன். மற்றபடி தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது. திமுக, அதிமுக இரண்டுக்குமே நான் வெவ்வேறு தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன்.
Friday, January 16, 2009
பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா
சுசித்ரா அகாதமியும் கர்நாடக அரசும் சேர்ந்து நடத்தும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா வியாழனன்று (ஜனவரி 15) துவங்கியது. இதில் திரையிடப்படும் படங்களின் அட்டவனை இங்கே.
இன்றிரவு (வெள்ளி) ஆந்த்ரே வாஜ்டாவின் கடீன் என்ற போலந்து நாட்டுப் படத்தைப் பார்த்தேன். பார்க்கலாம். அடுத்த வாரம் விழா முடிந்தவுடன் நான் பார்த்த படங்களின் விமர்சனம் எழுதுகிறேன்.
குறிப்பு: இவ்விழாவில் படங்களைப் பார்ப்பதற்கு ஒட்டுமொத்த அனுமதிச்சீட்டு வேண்டும். திரையரங்க வாசலில் பெற்றுக்கொள்ளலாம். விலை ரூ 500. திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ரூ 300. மாணவர்களுக்கும் சலுகை விலையில் கிடைக்கும்.
இன்றிரவு (வெள்ளி) ஆந்த்ரே வாஜ்டாவின் கடீன் என்ற போலந்து நாட்டுப் படத்தைப் பார்த்தேன். பார்க்கலாம். அடுத்த வாரம் விழா முடிந்தவுடன் நான் பார்த்த படங்களின் விமர்சனம் எழுதுகிறேன்.
குறிப்பு: இவ்விழாவில் படங்களைப் பார்ப்பதற்கு ஒட்டுமொத்த அனுமதிச்சீட்டு வேண்டும். திரையரங்க வாசலில் பெற்றுக்கொள்ளலாம். விலை ரூ 500. திரைப்பட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ரூ 300. மாணவர்களுக்கும் சலுகை விலையில் கிடைக்கும்.
Thursday, January 15, 2009
உலகுக்கே வழிகாட்டும் ராஜபக்ஸே!
ஒபாமா வந்து இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான போரை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறது ஒரு கூட்டம். ஆனால் தீவிரவாதிகளை எப்படி ஒழிக்கவேண்டுமென்று அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ராஜபக்ஸேவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறது வால் ஸ்டிரீட் ஜர்னல்!
"Colombo's military strategy against Tamil terrorists has worked. Negotiations haven't. That's an important reminder as Israel faces its own terrorism problem and as the U.S. works to foster stability and political progress in Iraq. Take note, Barack Obama."
நன்றி: WSJ.
"Colombo's military strategy against Tamil terrorists has worked. Negotiations haven't. That's an important reminder as Israel faces its own terrorism problem and as the U.S. works to foster stability and political progress in Iraq. Take note, Barack Obama."
நன்றி: WSJ.
Wednesday, January 14, 2009
இந்தியத் திருநாள் வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.
தீபாவளி இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும், காரணமும் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. புத்தாண்டும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் அவரவர் பயன்படுத்தும் நாட்காட்டி கொண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொண்டாடப் படுவதன் காரணமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முற்றும் வேறுபட்டிருக்கிறது.
இந்தியாவில் சங்கராந்தி எந்த பகுதியில், என்ன பெயரில், எவ்வாறு கொண்டாப் படுகிறது என்கிற பட்டியல் கீழே! எல்லா பகுதிகளிலுமே சூரியன் மகரரேகையிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும் நாள்தான் திருநாள். உழவர்கள் அறுவடை முடிந்த சந்தோஷத்தில் கொண்டாடுவதே காரணம்.
தெற்கு:
1. தமிழகம் - பொங்கல் - முதல் நாள் போகியன்று நெர்களைந்த கதிர்களை தீயிட்டு கொளுத்தி சுத்தம் செய்து, அடுத்த தினம் பொங்கலிட்டு சூரியனை வழிபடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் மாட்டுப்பொங்கலாகவும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகின்றன.
2. ஆந்திரா - பெத்த பண்டுகா - தமிழகத்தை போன்றே போகி, சங்கராந்தி, கணுமா, முக்கணுமா என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். பட்டம் விடுதலும் உண்டு.
3. கர்நாடகம் - சங்கராந்தி - எள்ளும், வெல்லமும் கலந்த 'எள்ளு-பெல்லா' என்ற திண்பண்டம் இங்கே சிறப்பு.
4. கேரளா - சங்கராந்தி - இங்கு சூரியனின் உத்தராயணம் கொண்டாடப்பட்டாலும் அது உழவர் திருநாளாக இல்லை. ஓணமே அவர்களது உழவர் திருநாள்.
வடக்கு:
1. பஞ்சாப் - லோஹிரி/மகி - லோகிரியன்று தீயில் கறும்பு, அரிசி ஆகியவற்றை கொளுத்தி, சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுகிறார்கள். அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
2. உத்தராஞ்சல் - கூகுடியா - அரிசியும், பருப்பும் கலந்த கிச்சிடியை சூரியனுக்கு படைக்கின்றனர். 'காலே கவ்வா' (கருப்புக் காகம்) என்று குழந்தைகள் பாடி காகங்களை கிச்சிடி சாப்பிட அழைக்கின்றனர்.
3. உத்திர பிரதேசம் - கிச்சிடி - கங்கையில் குளித்து சூரியனைக் குறிக்கும் காயத்ரி மந்திரம் சொல்லி கிச்சிடி படைக்கிறார்கள்.
4. மத்திய பிரதேசம் - சுக்ராத் - இனிப்பு பலகாரங்கள் இங்கு சிறப்பு.
கிழக்கு:
1. அசாம் - உருகா/போகாலி பீகு - முதல் நாள் உருகாவில் 'பேலாகர்' என்ற சக்கைகளிலான வீடு கட்டப்பட்டு மேஜி என்ற பெயரில் தீ கொளுத்தப்படுகிறது. அடுத்த நாள் போகாலி பீகு அன்று சூரியனை வழிபடுகிறார்கள். படங்கள் இங்கே.
2. ஒரிசா - சங்கராந்தி - போகி எரித்தலும், மறுநாள் சூரிய வழிபாடும் இங்கும் உண்டு.
3. வங்காளம் - 'கங்கா சாகர்' என்று கங்கை கடலில் கலக்குமிடத்தில் வழிபடுவது இங்கு சிறப்பு.
மேற்கு:
1. மகாராஷ்டிரம் - சங்கராந்தி - எள்ளில் செய்யப்படும் 'தில்குல்' என்ற பண்டம் இங்கே சிறப்பு.
2. குஜராத் - உத்தராயன் - பட்டம் விடுதல் இங்கு விழாவின் முக்கிய அங்கம்.
படங்களுடன் இந்தியா முழுதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் விதங்களை விளக்கும் கட்டுரைகள் கீழே!
1. நிருபமா சிறீராம் என்பவரின் வலைப்பதிவில் இந்த இடுகை.
2. றீடிஃப் தளத்தில் புகைப்படங்கள் இங்கே.
3. இந்து யங் வேர்ல்டில் இந்த கட்டுரை.
பொங்கலோ பொங்கல்!
கொசுறு: பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் Pongkal என்று எழுதுவதுதான் சரியோ?
இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.
தீபாவளி இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும், காரணமும் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. புத்தாண்டும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் அவரவர் பயன்படுத்தும் நாட்காட்டி கொண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொண்டாடப் படுவதன் காரணமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முற்றும் வேறுபட்டிருக்கிறது.
இந்தியாவில் சங்கராந்தி எந்த பகுதியில், என்ன பெயரில், எவ்வாறு கொண்டாப் படுகிறது என்கிற பட்டியல் கீழே! எல்லா பகுதிகளிலுமே சூரியன் மகரரேகையிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும் நாள்தான் திருநாள். உழவர்கள் அறுவடை முடிந்த சந்தோஷத்தில் கொண்டாடுவதே காரணம்.
தெற்கு:
1. தமிழகம் - பொங்கல் - முதல் நாள் போகியன்று நெர்களைந்த கதிர்களை தீயிட்டு கொளுத்தி சுத்தம் செய்து, அடுத்த தினம் பொங்கலிட்டு சூரியனை வழிபடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் மாட்டுப்பொங்கலாகவும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகின்றன.
2. ஆந்திரா - பெத்த பண்டுகா - தமிழகத்தை போன்றே போகி, சங்கராந்தி, கணுமா, முக்கணுமா என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். பட்டம் விடுதலும் உண்டு.
3. கர்நாடகம் - சங்கராந்தி - எள்ளும், வெல்லமும் கலந்த 'எள்ளு-பெல்லா' என்ற திண்பண்டம் இங்கே சிறப்பு.
4. கேரளா - சங்கராந்தி - இங்கு சூரியனின் உத்தராயணம் கொண்டாடப்பட்டாலும் அது உழவர் திருநாளாக இல்லை. ஓணமே அவர்களது உழவர் திருநாள்.
வடக்கு:
1. பஞ்சாப் - லோஹிரி/மகி - லோகிரியன்று தீயில் கறும்பு, அரிசி ஆகியவற்றை கொளுத்தி, சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுகிறார்கள். அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
2. உத்தராஞ்சல் - கூகுடியா - அரிசியும், பருப்பும் கலந்த கிச்சிடியை சூரியனுக்கு படைக்கின்றனர். 'காலே கவ்வா' (கருப்புக் காகம்) என்று குழந்தைகள் பாடி காகங்களை கிச்சிடி சாப்பிட அழைக்கின்றனர்.
3. உத்திர பிரதேசம் - கிச்சிடி - கங்கையில் குளித்து சூரியனைக் குறிக்கும் காயத்ரி மந்திரம் சொல்லி கிச்சிடி படைக்கிறார்கள்.
4. மத்திய பிரதேசம் - சுக்ராத் - இனிப்பு பலகாரங்கள் இங்கு சிறப்பு.
கிழக்கு:
1. அசாம் - உருகா/போகாலி பீகு - முதல் நாள் உருகாவில் 'பேலாகர்' என்ற சக்கைகளிலான வீடு கட்டப்பட்டு மேஜி என்ற பெயரில் தீ கொளுத்தப்படுகிறது. அடுத்த நாள் போகாலி பீகு அன்று சூரியனை வழிபடுகிறார்கள். படங்கள் இங்கே.
2. ஒரிசா - சங்கராந்தி - போகி எரித்தலும், மறுநாள் சூரிய வழிபாடும் இங்கும் உண்டு.
3. வங்காளம் - 'கங்கா சாகர்' என்று கங்கை கடலில் கலக்குமிடத்தில் வழிபடுவது இங்கு சிறப்பு.
மேற்கு:
1. மகாராஷ்டிரம் - சங்கராந்தி - எள்ளில் செய்யப்படும் 'தில்குல்' என்ற பண்டம் இங்கே சிறப்பு.
2. குஜராத் - உத்தராயன் - பட்டம் விடுதல் இங்கு விழாவின் முக்கிய அங்கம்.
படங்களுடன் இந்தியா முழுதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் விதங்களை விளக்கும் கட்டுரைகள் கீழே!
1. நிருபமா சிறீராம் என்பவரின் வலைப்பதிவில் இந்த இடுகை.
2. றீடிஃப் தளத்தில் புகைப்படங்கள் இங்கே.
3. இந்து யங் வேர்ல்டில் இந்த கட்டுரை.
பொங்கலோ பொங்கல்!
கொசுறு: பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் Pongkal என்று எழுதுவதுதான் சரியோ?
Monday, January 12, 2009
சென்னை புத்தக விழா 2009
சென்னை புத்தக விழாவுக்கு இது 32 ஆவது வருடமாம். நான் இப்போதுதான் முதன்முறையாகச் சென்றுவந்தேன். ரொம்ப சுமார்தான்!
தமிழில் இத்தனை பதிப்பகங்கள் எதற்கு இருக்கின்றன என்று விளங்கவில்லை. ஒரே வகையான புத்தகங்களை (பெரும்பாலும் தரமில்லாதவை) பதிப்பித்து இவர்களுக்கு எவ்வாறு போனியாகிறது என்று புரியவில்லை.
விழா அரங்கில் காற்றோட்டமேயில்லாமல் மூச்சு முட்டுகிறது. புத்தகங்களைப் புரட்டிப் படித்து வாங்கிச்செல்பவர்கள் இந்தப் புத்தக விழாவுக்கு வரவேண்டாம்.
பெரும்பாலான கடைகளில் வெகு சில புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கழிவு கேட்பார்களே என்ற பயமா என்று தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் பத்தே புத்தகங்களின் பிரதிகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். அந்தப் பத்தும் 'டாலர் மில்லியனர் ஆவது எப்படி' மாதிரியான லூசுகள் படிக்கும் புத்தகங்களே!
கடைகளில் கிடைக்கும் புத்தகங்களில் கணிசமானவை 'ஆன்மீகப் புத்தகங்கள்' என்ற பெயர்கொண்ட மூடநம்பிக்கைத் திரட்டிகள். பாட்டு பாடினால் சனங்களின் குறைபோக்க 'கடவுள்' என்ன பசு மாடா?
தமிழிலிருந்து கன்னடம் கற்றுக்கொள்ள எதாவது புத்தகம் கிடைக்குமா என்று அலைந்து திரிந்து ஓய்துவிட்டேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கடையில் தொல்காப்பியத்தின் எழுத்து மற்றும் சொல்லதிகாரப் புத்த்கங்களை வாங்கினேன். நல்ல பதிப்பு. வாங்கலாம்.
தமிழில் இத்தனை பதிப்பகங்கள் எதற்கு இருக்கின்றன என்று விளங்கவில்லை. ஒரே வகையான புத்தகங்களை (பெரும்பாலும் தரமில்லாதவை) பதிப்பித்து இவர்களுக்கு எவ்வாறு போனியாகிறது என்று புரியவில்லை.
விழா அரங்கில் காற்றோட்டமேயில்லாமல் மூச்சு முட்டுகிறது. புத்தகங்களைப் புரட்டிப் படித்து வாங்கிச்செல்பவர்கள் இந்தப் புத்தக விழாவுக்கு வரவேண்டாம்.
பெரும்பாலான கடைகளில் வெகு சில புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கழிவு கேட்பார்களே என்ற பயமா என்று தெரியவில்லை. கிழக்கு பதிப்பகத்தில் பத்தே புத்தகங்களின் பிரதிகளை ஆங்காங்கே வைத்திருக்கிறார்கள். அந்தப் பத்தும் 'டாலர் மில்லியனர் ஆவது எப்படி' மாதிரியான லூசுகள் படிக்கும் புத்தகங்களே!
கடைகளில் கிடைக்கும் புத்தகங்களில் கணிசமானவை 'ஆன்மீகப் புத்தகங்கள்' என்ற பெயர்கொண்ட மூடநம்பிக்கைத் திரட்டிகள். பாட்டு பாடினால் சனங்களின் குறைபோக்க 'கடவுள்' என்ன பசு மாடா?
தமிழிலிருந்து கன்னடம் கற்றுக்கொள்ள எதாவது புத்தகம் கிடைக்குமா என்று அலைந்து திரிந்து ஓய்துவிட்டேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கடையில் தொல்காப்பியத்தின் எழுத்து மற்றும் சொல்லதிகாரப் புத்த்கங்களை வாங்கினேன். நல்ல பதிப்பு. வாங்கலாம்.
Friday, January 02, 2009
ஈழம் கொண்டான்!
தீவிரவாதிகளிடமிருந்து கிளிநொச்சி மீட்கபட்ட செய்தி இனிய புத்தாண்டுப் பரிசாய் வந்திருக்கிறது! மகிழ்ச்சி.
இந்த வெற்றியை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது குறித்து மேலும் மகிழ்ச்சி. ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னிப் பகுதிகள் அனைத்துமென்று படிப்படியாய் மேலும் பல வெற்றிகள் குவிக்க இலங்கைக்கு எனது வாழ்த்துகள்.
மகிந்தா ராஜபக்சே போன்று சொன்னதை செய்து காட்டும் திடமான தலைவர்கள் கிடைத்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உலகம் வெற்றிபெறமுடியும். ராஜபக்சே தலைமையில் இலங்கை உன்னத நிலையை அடையுமென்று நம்பலாம்.
புலிகளின் தமிழக இனவெறி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
உங்களுக்குக் கிடைத்திருக்கும் சமீபத்திய செறுப்படியின் வலி மறைவதற்குள் இலங்கைத் தமிழர்கள் குறித்த உங்களுடைய நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிரையும் நல்வாழ்வையும்விட உங்களின் இனவெறிக் கனவு முக்கியமானதா?
இந்த வெற்றியை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது குறித்து மேலும் மகிழ்ச்சி. ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னிப் பகுதிகள் அனைத்துமென்று படிப்படியாய் மேலும் பல வெற்றிகள் குவிக்க இலங்கைக்கு எனது வாழ்த்துகள்.
மகிந்தா ராஜபக்சே போன்று சொன்னதை செய்து காட்டும் திடமான தலைவர்கள் கிடைத்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் உலகம் வெற்றிபெறமுடியும். ராஜபக்சே தலைமையில் இலங்கை உன்னத நிலையை அடையுமென்று நம்பலாம்.
புலிகளின் தமிழக இனவெறி நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
உங்களுக்குக் கிடைத்திருக்கும் சமீபத்திய செறுப்படியின் வலி மறைவதற்குள் இலங்கைத் தமிழர்கள் குறித்த உங்களுடைய நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிரையும் நல்வாழ்வையும்விட உங்களின் இனவெறிக் கனவு முக்கியமானதா?
Sunday, December 21, 2008
கேரள சர்வதேச திரைப்பட விழா
டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கிய கேரள சர்வதேச திரைப்பட விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. நான்கு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு 10 படங்களைப் பார்த்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நான்கு படங்களின் விமர்சனங்கள் இங்கே! திருவனந்தபுரம் புகைப்படங்கள் இங்கே.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் தற்போது நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நிறைவுறும். கலந்து கொண்டவர்கள் விவரங்கள் தெரிவிக்கவும்!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் தற்போது நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நிறைவுறும். கலந்து கொண்டவர்கள் விவரங்கள் தெரிவிக்கவும்!
Wednesday, December 03, 2008
மதுரை விவரணத் திரைப்பட விழா
10 ஆவது உலக விவரண மற்றும் குறும்படத் திரைப்பட விழா மதுரையில் இன்று (டிசம்பர் 3) தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விவரங்கள் இங்கே.
Sunday, November 23, 2008
அகண்ட பாரதத்தினாய் வா வா ...

தங்கள் நாடு சிதறுண்டு மேலுள்ள படத்திலுள்ளது போலாகும் என்று பாகிஸ்தானியர் பயப்படுவதாய் இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கிறது. மிச்சமிருக்கும் பஞ்சாபும் சிந்தும் இந்தியாவுக்குத் திரும்பினால் அகண்ட பாரதக் கனவு நனவாகும். இந்து நதி மேற்கு எல்லையாக இருந்தால்தானே இது 'இந்தியா'. சரி, சரி, கனவுதான். இவர் கூட அத்தகைய கனவு கண்டிருக்கிறார்.
படம்: நன்றி நியூயார்க் டைம்ஸ்.
Tuesday, November 11, 2008
மெல்ல குன்க்னா இனி வாழும்!
குஜராத் மாநிலம் தேஜ்கடில் செயல்பட்டுவரும் ஆதிவாசி அகாதமி பாராட்டப்பட வேண்டியதொரு முயற்சி. ஆதிவாசிகளின் மொழி, சமையல், ஓவியம் மற்றும் இன்னபிற கலை பாரம்பரியங்களைக் காப்பாற்ற முயன்று வருகிறார்கள். குன்க்னா உள்ளிட்ட சில பேச்சுமொழிகளுக்கு அகராதி தயாரிக்கும் முயற்சி பற்றிய செய்தி இங்கே.
Saturday, November 08, 2008
அத்வானி வலைதளம்!
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானி அவர்களின் வலைதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கே.
Monday, October 27, 2008
தீபாவளி வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! மகாவீரரின் வாழ்வியல் நெறிகள் நம்மை ஆட்கொள்ளட்டும்!
Saturday, October 25, 2008
கொடுத்தாய் வாழி இந்தியா!
மிண்ட் பத்திரிக்கையில் இன்று வெளியான நிரஞ்சன் ராஜதக்ஷாவின் கட்டுரை மிகவும் சிந்திக்க வைத்தது.
உலகின் முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, அவற்றின் இயலுமை வரிசையில் கோபன்ஹேகன் இணக்க முடிவு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையின்படி குழந்தைகளுக்கு உயிர்சத்து மாத்திரைகள் வழங்குவது உலக வெம்மையை தடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைவிடவும் அதிக பலனளிக்கக்கூடியது என்று தெரிகிறது.
இன்றைய மிண்டில் குழந்தைகள் நலன் மற்றும் பிற விசயங்களுக்காக உழைக்கும் பல தொண்டு நிறுவனங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் சேகரித்த பட்டியல் கீழே.
Meljol, Mumbai.
Able Disabled All People Together (ADAPT), Mumbai.
Action for Ability Development and Inclusion (AADI), Delhi.
Spastics Society of Karnataka, Bengaluru.
Vidya Sagar, Chennai.
SOS Children's Villages of India, Delhi.
Balagurukulam, Chennai.
Room to read, Delhi.
Akshara Foundation, Bengaluru.
Association of Writers and Illustrators for Children, Delhi.
Pratham, Mumbai.
Pankhudi, Bengaluru.
The Blind Relief Association, Delhi.
National Association of the Blind, Mumbai.
Esha - People for the Blind
Mumbai Mobile Creche
Door step School, Mumbai.
Deepalaya, Delhi.
Akanksha, Mumbai and Pune.
Butterflies, Delhi.
Make-a-wish Foundation, Delhi.
Cancer Foundation of India, Kolkata.
Cancer Patients Aid Association (CPAA), Mumbai.
Arushi (Salaam Baalak Trust), Gurgaon.
Pranab Kanya Sangha, Kolkata.
Parikrma, Bengaluru.
Nanhi Kali, Mumbai.
Jamghat, Delhi.
Aasra, Mumbai.
Lifeline Foundation, Kolkata.
Childline India Foundation, Mumbai.
Roshni, Secunderabad.
Sneha, Chennai.
Maithri, Kochi.
Sumaitri, Delhi.
Naz Care Home, Delhi.
The Freedom Foundation.
Manavya, Pune.
Child Survival India, Delhi.
உலகின் முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, அவற்றின் இயலுமை வரிசையில் கோபன்ஹேகன் இணக்க முடிவு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையின்படி குழந்தைகளுக்கு உயிர்சத்து மாத்திரைகள் வழங்குவது உலக வெம்மையை தடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைவிடவும் அதிக பலனளிக்கக்கூடியது என்று தெரிகிறது.
இன்றைய மிண்டில் குழந்தைகள் நலன் மற்றும் பிற விசயங்களுக்காக உழைக்கும் பல தொண்டு நிறுவனங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் சேகரித்த பட்டியல் கீழே.
Meljol, Mumbai.
Able Disabled All People Together (ADAPT), Mumbai.
Action for Ability Development and Inclusion (AADI), Delhi.
Spastics Society of Karnataka, Bengaluru.
Vidya Sagar, Chennai.
SOS Children's Villages of India, Delhi.
Balagurukulam, Chennai.
Room to read, Delhi.
Akshara Foundation, Bengaluru.
Association of Writers and Illustrators for Children, Delhi.
Pratham, Mumbai.
Pankhudi, Bengaluru.
The Blind Relief Association, Delhi.
National Association of the Blind, Mumbai.
Esha - People for the Blind
Mumbai Mobile Creche
Door step School, Mumbai.
Deepalaya, Delhi.
Akanksha, Mumbai and Pune.
Butterflies, Delhi.
Make-a-wish Foundation, Delhi.
Cancer Foundation of India, Kolkata.
Cancer Patients Aid Association (CPAA), Mumbai.
Arushi (Salaam Baalak Trust), Gurgaon.
Pranab Kanya Sangha, Kolkata.
Parikrma, Bengaluru.
Nanhi Kali, Mumbai.
Jamghat, Delhi.
Aasra, Mumbai.
Lifeline Foundation, Kolkata.
Childline India Foundation, Mumbai.
Roshni, Secunderabad.
Sneha, Chennai.
Maithri, Kochi.
Sumaitri, Delhi.
Naz Care Home, Delhi.
The Freedom Foundation.
Manavya, Pune.
Child Survival India, Delhi.
Thursday, October 23, 2008
தமிழ் இனவெறிவாதம் ஒழிக!
தமிழக அரசியல் கட்சிகளின் இனவெறிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இப்போது தனித்தமிழ்நாடும் வேண்டுமாம் (?!) ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்?) கொடுப்பது எவ்வளவு நியாயமாக இருக்குமோ அவ்வளவு நியாயமானது ஈழத்தமிழர் போராட்டம்.
தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கை எதையாவது இவர்களை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! எதற்கெடுத்தாலும் 1983 ஜூலைப் படுகொலைகளை வைத்தே தங்களது இனவெறிக்கு நியாயம் கற்பிப்பவர்கள் இவர்கள்.
இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள் அளவுக்கதிகமான பதவிகளை தங்களிடம் வைத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சமூக நிலையை மாற்றி, சிங்களவரின் உரிமைகளை நிலைநாட்ட படிப்படியாக பல செயல்களைச் செய்தது.
அந்த செயல்களில் பல நியாயமில்லதவை. இந்தியாவில் இந்தியை தேசிய மொழியாக்க நினைத்ததுபோல அங்கு சிங்களத்தை ஆக்க முயற்சித்தார்கள். தமிழகத்தில் பிராமணரின் பங்களிப்புகள் (கிரந்தம், நாட்காட்டிமுறை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு. செய்தித்தாள்கள் ...) சிறுமைப்படுத்தப்படுதல், அவர்களின் குடுமி அறுத்தல் போன்றவற்றிற்கு நிகரான செயல்கள் இலங்கையிலும் சிங்களவரால் செய்யப்பட்டன.
இந்தகைய செயல்கள் தமிழர், சிங்களர் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது இயல்பே. அது இனக்கலவரத்தில் முடிந்ததும் எதிர்பார்க்கக்கூடியதே. இனக்கலவரத்தில் அரசுப்படைகள் எவ்வளவு நடுநிலையோடு செயல்படும் என்பதை சொல்லவும் வேண்டுமா? குஜராத், பம்பாய் கலவரங்களில் நாம் பார்க்காத 'நடுநிலைமையா'? தமிழகத்திலேகூட காவல்துறையினர் "முஸ்லீம்களை போய் அடியுங்கள், நாங்கள் வந்தவுடன் ஓடிவிடுங்கள்" என்று சொன்னதை அடித்தவர் மூலமாகவே நான் கேட்டிருக்கிறேன்!
அதே போல 1983இல் நடந்த இனப்படுகொலைகளில் இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்கேற்றது உண்மையே. அதற்காக இலங்கைத் தமிழருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் அளவுக்கெல்லாம் சென்று இந்தியா உதவி செய்தது. எதிராளியை பலமாக்கி இன்னொரு கட்சியை பேச்சுவார்த்தைக்கு வரவைப்பது எங்கும் நடப்பதே. அவ்வாறு 1987இல் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனாய் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களே தாம் அதிக வாழும் இடங்களை ஆளும் வகையில் மாகாண அரசுகள் ஏற்படுத்த இலங்கை ஒப்புக்கொண்டது.
ஆனால் ஆயுத பலமும், தமிழ்நாட்டு இனவெறியர்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்ற புலிகள் என்னும் பாசிச, இனவாத, பயங்கரவாத அமைப்பு, 'நம் கை ஓங்கியிருக்கும் போது எதற்காக அமைதி வழியில் செல்லவேண்டும்' என்று 1987 உடன்படிக்கையை செல்லாக்காசாக்க முயற்சித்தது. ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கு சென்ற இந்திய இராணுவத்தை (ஜெயவர்த்தனே உதவியுடன்) போரில் சிக்கவைத்தது.
அவ்வாறு சிக்கிக்கொண்ட இந்திய இராணுவம் புலிகளை நேரடியாக எதிர்கொண்டு, அவர்களை பூண்டோடு அழிக்காததையும், இந்திய இராணுவ வீரர்கள் ஈழத்தமிழர்பால் செய்த அத்துமீரல்களையும், நான் ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகள் என்று முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1987-88 இல் ஒழுங்காகச் செய்து முடிக்காத புலிகள் அழிப்பை, இன்று ராஜபக்சே அரசும், இந்திய அரசும் செய்து முடிப்பது மிகவும் வரவேற்கத் தகுந்ததே.
தமிழகத்தில் புலிகளை ஆதரிக்காதவர்கள் தமிழ்த்துரோகிகள் என்றால், ஆதரிப்பவர்கள் (இந்திய) தேசத்துரோகிகள் என்று ஜெயலலிதா சொல்வது சரியே. மேலும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் (இலங்கை) தேசத்துரோகிகள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
ஈழத்தமிழரிடம் தற்போது நியாயமான கோரிக்கைகள் ஒன்றுமேயில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் போல் இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல. (இந்திய வம்சாவளித் தமிழரில் பலர் சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்தியா திரும்பினர். முத்தையா முரளிதரனின் குடும்பமும் திரும்பியிருந்தால் நமக்கு நல்ல சுழற்பந்துவீச்சாக்ளர் இடைத்திருப்பார்!).
தாங்கள் ஆரம்பித்த இனவெறி அரசியல் மற்றும் ஆயுதப்போராட்டத்தின் பலன்களை ஈழத்தமிழர் இன்று அனுபவிக்கிறார்கள். இவர்களை அடக்க இலங்கை இராணுவம் நியாயமாகவோ, அத்துமீறியோ நடவடிக்கை எடுத்தால் 'இனப்படுகொலை' என்று அந்தர்பல்டி அடிக்கிறார்கள். உலகின் பிறநாடுகளில் அண்டிப்பிழைத்தும்கூட தங்கள் நாட்டில் தீவிரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இவர்களுக்கு தமிழக மக்கள் வேறு உதவவேண்டுமாம்! நல்ல கதை!
நிற்க. இலங்கை அரசும், இராணுவமும் எப்போதும் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் 25 ஆண்டு தொடர் சண்டையில் சிங்களர் மட்டும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. 13வது சட்டத்திருத்தில் சில ஷரத்துகளை மாற்றவோ, சேர்க்கவோ வேண்டுமானால், அதை தமிழ் அரசியல் கட்சிகள்தான் முயன்று செய்யவேண்டும். புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பும், அவர்களின் தமிழ்நாட்டு இனவெறி நண்பர்களும் அல்ல.
மேலும் ஈழத்தமிழர் இலங்கையின் நல்ல குடிமக்களாய், அமைதியாய் வாழவிரும்பினாலும் புலிகள் அதை அனுமதிக்கப்போவதில்லை. புலிகளை அழித்தொழிப்பதுதான் ஈழத்தமிழருக்கு சிங்களவரும், இந்தியரும் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. அந்த உதவியை தடுக்க நினைக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டுவங்கி அரசியல் மிகவும் கண்டிக்கத்தது.
தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய் தெரியவில்லை. ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கை எதையாவது இவர்களை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! எதற்கெடுத்தாலும் 1983 ஜூலைப் படுகொலைகளை வைத்தே தங்களது இனவெறிக்கு நியாயம் கற்பிப்பவர்கள் இவர்கள்.
இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள் அளவுக்கதிகமான பதவிகளை தங்களிடம் வைத்திருந்தார்கள். சுதந்திர இலங்கை இந்த ஏற்றுக்கொள்ள முடியாத சமூக நிலையை மாற்றி, சிங்களவரின் உரிமைகளை நிலைநாட்ட படிப்படியாக பல செயல்களைச் செய்தது.
அந்த செயல்களில் பல நியாயமில்லதவை. இந்தியாவில் இந்தியை தேசிய மொழியாக்க நினைத்ததுபோல அங்கு சிங்களத்தை ஆக்க முயற்சித்தார்கள். தமிழகத்தில் பிராமணரின் பங்களிப்புகள் (கிரந்தம், நாட்காட்டிமுறை, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு. செய்தித்தாள்கள் ...) சிறுமைப்படுத்தப்படுதல், அவர்களின் குடுமி அறுத்தல் போன்றவற்றிற்கு நிகரான செயல்கள் இலங்கையிலும் சிங்களவரால் செய்யப்பட்டன.
இந்தகைய செயல்கள் தமிழர், சிங்களர் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது இயல்பே. அது இனக்கலவரத்தில் முடிந்ததும் எதிர்பார்க்கக்கூடியதே. இனக்கலவரத்தில் அரசுப்படைகள் எவ்வளவு நடுநிலையோடு செயல்படும் என்பதை சொல்லவும் வேண்டுமா? குஜராத், பம்பாய் கலவரங்களில் நாம் பார்க்காத 'நடுநிலைமையா'? தமிழகத்திலேகூட காவல்துறையினர் "முஸ்லீம்களை போய் அடியுங்கள், நாங்கள் வந்தவுடன் ஓடிவிடுங்கள்" என்று சொன்னதை அடித்தவர் மூலமாகவே நான் கேட்டிருக்கிறேன்!
அதே போல 1983இல் நடந்த இனப்படுகொலைகளில் இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்கேற்றது உண்மையே. அதற்காக இலங்கைத் தமிழருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் அளவுக்கெல்லாம் சென்று இந்தியா உதவி செய்தது. எதிராளியை பலமாக்கி இன்னொரு கட்சியை பேச்சுவார்த்தைக்கு வரவைப்பது எங்கும் நடப்பதே. அவ்வாறு 1987இல் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனாய் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களே தாம் அதிக வாழும் இடங்களை ஆளும் வகையில் மாகாண அரசுகள் ஏற்படுத்த இலங்கை ஒப்புக்கொண்டது.
ஆனால் ஆயுத பலமும், தமிழ்நாட்டு இனவெறியர்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்ற புலிகள் என்னும் பாசிச, இனவாத, பயங்கரவாத அமைப்பு, 'நம் கை ஓங்கியிருக்கும் போது எதற்காக அமைதி வழியில் செல்லவேண்டும்' என்று 1987 உடன்படிக்கையை செல்லாக்காசாக்க முயற்சித்தது. ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கு சென்ற இந்திய இராணுவத்தை (ஜெயவர்த்தனே உதவியுடன்) போரில் சிக்கவைத்தது.
அவ்வாறு சிக்கிக்கொண்ட இந்திய இராணுவம் புலிகளை நேரடியாக எதிர்கொண்டு, அவர்களை பூண்டோடு அழிக்காததையும், இந்திய இராணுவ வீரர்கள் ஈழத்தமிழர்பால் செய்த அத்துமீரல்களையும், நான் ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகள் என்று முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 1987-88 இல் ஒழுங்காகச் செய்து முடிக்காத புலிகள் அழிப்பை, இன்று ராஜபக்சே அரசும், இந்திய அரசும் செய்து முடிப்பது மிகவும் வரவேற்கத் தகுந்ததே.
தமிழகத்தில் புலிகளை ஆதரிக்காதவர்கள் தமிழ்த்துரோகிகள் என்றால், ஆதரிப்பவர்கள் (இந்திய) தேசத்துரோகிகள் என்று ஜெயலலிதா சொல்வது சரியே. மேலும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் (இலங்கை) தேசத்துரோகிகள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
ஈழத்தமிழரிடம் தற்போது நியாயமான கோரிக்கைகள் ஒன்றுமேயில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்கள் போல் இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல. (இந்திய வம்சாவளித் தமிழரில் பலர் சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கையின்படி இந்தியா திரும்பினர். முத்தையா முரளிதரனின் குடும்பமும் திரும்பியிருந்தால் நமக்கு நல்ல சுழற்பந்துவீச்சாக்ளர் இடைத்திருப்பார்!).
தாங்கள் ஆரம்பித்த இனவெறி அரசியல் மற்றும் ஆயுதப்போராட்டத்தின் பலன்களை ஈழத்தமிழர் இன்று அனுபவிக்கிறார்கள். இவர்களை அடக்க இலங்கை இராணுவம் நியாயமாகவோ, அத்துமீறியோ நடவடிக்கை எடுத்தால் 'இனப்படுகொலை' என்று அந்தர்பல்டி அடிக்கிறார்கள். உலகின் பிறநாடுகளில் அண்டிப்பிழைத்தும்கூட தங்கள் நாட்டில் தீவிரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இவர்களுக்கு தமிழக மக்கள் வேறு உதவவேண்டுமாம்! நல்ல கதை!
நிற்க. இலங்கை அரசும், இராணுவமும் எப்போதும் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் 25 ஆண்டு தொடர் சண்டையில் சிங்களர் மட்டும் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. 13வது சட்டத்திருத்தில் சில ஷரத்துகளை மாற்றவோ, சேர்க்கவோ வேண்டுமானால், அதை தமிழ் அரசியல் கட்சிகள்தான் முயன்று செய்யவேண்டும். புலிகள் என்னும் தீவிரவாத அமைப்பும், அவர்களின் தமிழ்நாட்டு இனவெறி நண்பர்களும் அல்ல.
மேலும் ஈழத்தமிழர் இலங்கையின் நல்ல குடிமக்களாய், அமைதியாய் வாழவிரும்பினாலும் புலிகள் அதை அனுமதிக்கப்போவதில்லை. புலிகளை அழித்தொழிப்பதுதான் ஈழத்தமிழருக்கு சிங்களவரும், இந்தியரும் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி. அந்த உதவியை தடுக்க நினைக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் ஓட்டுவங்கி அரசியல் மிகவும் கண்டிக்கத்தது.
Tuesday, October 21, 2008
தேமதுரச் சிங்களம்!
இந்திய மொழிகளிலேயே மலையாளம் கேட்பதற்கு ரம்மியமான மொழி என்பது எனது கருத்து. 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து' என்று பாரதி பாடியதில், 'சுந்தரம்' கர்னாடக இசையைக் குறிப்பதேயன்றி தெலுங்கைக் குறிக்க வாய்ப்பில்லை. மலையாளத்தின் பால் சமஸ்கிரதத்தின் தாக்கம் நாம் அறிந்ததே.
மேலுள்ளது போல், சிங்கள மொழி உச்சரிப்பு இவ்வளவு தூரம் சமஸ்கிரதத்தை ஒத்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. பிரயாசை, நகரம் என்று சொற்களையும் இனங்காண முடிகிறது. ஈழத்தமிழின் ரிங்காரமும் சிங்களத் தாக்கத்தினால் வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. மலையாளமும், சிங்களமும் கிரந்த எழுத்துகள் சார்ந்த எழுத்துமுறையைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிற்க. தேமதுரச் சிங்களத்தில் விடுதலைப் புலிகள் அடித்து விரட்டப்பட்டு, கிளிநொச்சி மீட்கப்படுகிறது என்ற செய்தியைக் கேட்பதில் சுகமே தனிதான்!
மேலுள்ளது போல், சிங்கள மொழி உச்சரிப்பு இவ்வளவு தூரம் சமஸ்கிரதத்தை ஒத்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. பிரயாசை, நகரம் என்று சொற்களையும் இனங்காண முடிகிறது. ஈழத்தமிழின் ரிங்காரமும் சிங்களத் தாக்கத்தினால் வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. மலையாளமும், சிங்களமும் கிரந்த எழுத்துகள் சார்ந்த எழுத்துமுறையைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிற்க. தேமதுரச் சிங்களத்தில் விடுதலைப் புலிகள் அடித்து விரட்டப்பட்டு, கிளிநொச்சி மீட்கப்படுகிறது என்ற செய்தியைக் கேட்பதில் சுகமே தனிதான்!
Monday, October 20, 2008
விழிப்புணர்வு!
மார்பகப் புற்றுநோய் பற்றிய 'விழிப்புணர்வும்', அது பற்றிய ஒரு தமிழரின் அலம்பலும் இங்கே! ஹே!
Wednesday, October 08, 2008
இலங்கை: வெற்றியை நோக்கி ...
தமிழக அரசியல் கட்சிகளின் போலி ஒப்பாரிகள், இலங்கையில் 'விடுதலைப் பொறுக்கிகளுக்கு' தர்ம அடி விழுகிறது என்னும் நல்ல செய்தியை உறுதிப்படுத்துகின்றன. மகிழ்ச்சி!
புலிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவம் உதவி வருவது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகளுக்கு நல்ல பிராயச்சித்தார்த்தம். பிரபாகரன் கொல்லப்பட்டு, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டு, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.
இலங்கையில் நிரந்தர அமைதிக்கான பாதையில் அடைய வேண்டிய மைல் கற்கள் கீழே.
1. பிரபாகரன் மரணம்.
2. புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அவர்கள் வசமுள்ள (வன்னி உள்ளிட்ட) அனைத்து பகுதிகளும் மீட்கப்படுதல்.
3. ஐ.நா உள்ளிட்ட சேவை, மறுவாழ்வு அமைப்புகள் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு படிப்படியாகத் திரும்புதல்.
4. வடக்கு மாகாணத் தேர்தல்.
5. இலங்கை அரசியலைமைப்பு சட்டத்தின் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
6. ஈழ மறுசீரமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் உடன்பாடுகள்.
7. எஞ்சியுள்ள புலிகளும் பூண்டோடு அழிக்கப்படுதல் அல்லது போர்க் குற்றங்களுக்காக இலங்கை நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுதல்.
8. இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்புதல்.
9. உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் (விருந்தினராகவேணும்) நாடு திரும்புதல்.
10. சுபம்!
புலிகளை ஒழிப்பதற்கு இந்திய இராணுவம் உதவி வருவது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ராஜீவ் காந்தியின் இமாலயத் தவறுகளுக்கு நல்ல பிராயச்சித்தார்த்தம். பிரபாகரன் கொல்லப்பட்டு, புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டு, இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.
இலங்கையில் நிரந்தர அமைதிக்கான பாதையில் அடைய வேண்டிய மைல் கற்கள் கீழே.
1. பிரபாகரன் மரணம்.
2. புலிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அவர்கள் வசமுள்ள (வன்னி உள்ளிட்ட) அனைத்து பகுதிகளும் மீட்கப்படுதல்.
3. ஐ.நா உள்ளிட்ட சேவை, மறுவாழ்வு அமைப்புகள் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு படிப்படியாகத் திரும்புதல்.
4. வடக்கு மாகாணத் தேர்தல்.
5. இலங்கை அரசியலைமைப்பு சட்டத்தின் 13ஆம் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
6. ஈழ மறுசீரமைப்புக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் உடன்பாடுகள்.
7. எஞ்சியுள்ள புலிகளும் பூண்டோடு அழிக்கப்படுதல் அல்லது போர்க் குற்றங்களுக்காக இலங்கை நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுதல்.
8. இந்தியாவிலிருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்புதல்.
9. உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் (விருந்தினராகவேணும்) நாடு திரும்புதல்.
10. சுபம்!
Wednesday, September 03, 2008
கற்றது தமிழ், செத்தது ரசனை!
'ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்' என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் 'கற்றது தமிழ்' என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.
ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பலருக்கும் புரிவதில்லை. கதை, கருத்து அகியவையெல்லாம் ஒரு படத்தை மதிப்பிடுவதில் எந்த பங்கும் வகிக்கக்கூடாது. (ம் ... கதையே இல்லாமல் படமெடுப்பதை கண்டிப்பது வேறு விசயம்!)
கொடுத்த கதையை எவ்வாறு எடுத்திருக்கிறார்கள், ஒளி, ஒலிப்பதிவு எப்படியிருக்கிறது, திரைக்கதை தெருக்கூத்துத் தனமாக இருக்கிறதா, நடிகர்கள் தேமேயென்று வந்துபோகிறார்களா, ஒப்பனை தேவைப்பட்டால் அது எவ்வளவு அசிங்கமாகயிருக்கிறது? என்று எதையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை புகழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது!
மேலே நான் கொடுத்த எந்த தராதரத்திலும் 'கற்றது தமிழ்' நூற்றுக்கு பத்து மதிப்பெண்களைக்கூடப் பெறாது. மற்றபடி எதோ தமிழ் பற்றிய கதை என்றால் அதுவும் நகைப்புக்குரியது. ஒரு நூறு படங்களில் பார்த்துப் புளித்துப்போன தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
நிற்க. படமெடுப்பவர்கள் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்களே, படத்தை விமர்சிக்க நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள். ஆரோக்கியமான விமர்சனமே கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்புகளை வரவைக்கும்!
***
பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று 'வின்டர் லைட்' என்ற படத்தை பார்த்தேன். எப்போதும் போல ஆழமான படம். கடவுள் நம்பிக்கை போலித்தனமான சுயநலவாதம் என்கிறார் பெர்க்மன். ஆமேன்!
ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பலருக்கும் புரிவதில்லை. கதை, கருத்து அகியவையெல்லாம் ஒரு படத்தை மதிப்பிடுவதில் எந்த பங்கும் வகிக்கக்கூடாது. (ம் ... கதையே இல்லாமல் படமெடுப்பதை கண்டிப்பது வேறு விசயம்!)
கொடுத்த கதையை எவ்வாறு எடுத்திருக்கிறார்கள், ஒளி, ஒலிப்பதிவு எப்படியிருக்கிறது, திரைக்கதை தெருக்கூத்துத் தனமாக இருக்கிறதா, நடிகர்கள் தேமேயென்று வந்துபோகிறார்களா, ஒப்பனை தேவைப்பட்டால் அது எவ்வளவு அசிங்கமாகயிருக்கிறது? என்று எதையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை புகழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது!
மேலே நான் கொடுத்த எந்த தராதரத்திலும் 'கற்றது தமிழ்' நூற்றுக்கு பத்து மதிப்பெண்களைக்கூடப் பெறாது. மற்றபடி எதோ தமிழ் பற்றிய கதை என்றால் அதுவும் நகைப்புக்குரியது. ஒரு நூறு படங்களில் பார்த்துப் புளித்துப்போன தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
நிற்க. படமெடுப்பவர்கள் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்களே, படத்தை விமர்சிக்க நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள். ஆரோக்கியமான விமர்சனமே கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்புகளை வரவைக்கும்!
***
பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று 'வின்டர் லைட்' என்ற படத்தை பார்த்தேன். எப்போதும் போல ஆழமான படம். கடவுள் நம்பிக்கை போலித்தனமான சுயநலவாதம் என்கிறார் பெர்க்மன். ஆமேன்!
Subscribe to:
Posts (Atom)
