சிதம்பரம் நடராசர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என்று சமீபத்தில் வந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கற்றளியாயிருக்கும் எல்லா புராதனக் கோயில்களையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேன்டும்.
பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்கள்மீது ஒரு சிலர் உரிமை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்தக் கோயில்களில் மிகவும் அரிதானவற்றை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கவேண்டும். திருவண்ணாமலையில் நிகழ்ந்தது போன்று சில பெருச்சாலிக்கூட்டங்கள் சேர்ந்து தடைசெய்வதை அனுமதிக்கக்கூடாது.
கோயில் அர்ச்சகர் நியமனத்தில் சீர்திருத்தம் இன்னும் பேச்சளவிலேயே இருக்கிறது. இதுகுறித்து சில ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு இங்கே. சிவன், முருகன், அம்மன், அனுமார் கோயில்களில் பெரும்பாலானவற்றில் பிராமணர் அல்லாதவரே அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்.
பெருமாள் கோயில்களில் வைஷ்ணவர்கள் (ஐயங்கார்) நியமிக்கப்படலாம். ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம். ஆனால் மொத்தப் பணியிடங்களில் பிராமணர் எண்ணிக்கை சுமார் 10 சதவீதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மேலும் தங்கள் வீட்டுக் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த பிராமணரை அழைக்கும் அசிக்கத்தை தமிழகத்தார் முதலில் நிறுத்தவேண்டும். சம்பந்தமேயில்லாமல் பிராமணரை அழைக்கும் இவர்கள் முஸ்லீம் முல்லாக்களை ஏன் அழைப்பதில்லை என்று புரியவில்லை. ஆச்சாரிகள் உள்ளிட்ட சமூகத்தார் இது போன்று ஆரிய மோகம் கொண்டு அலைவதில்லை. வேத மதத்தின் சடங்குகளை பாதுகாக்கும் பொறுப்பு பிராமணருக்கு மட்டும் இருந்தால் போதுமானது.
மேலும் வேத மதத்துச் சடங்குகளை தமிழில் மட்டுமே செய்யவேண்டும் என்று கோரும் லூசுகளின் கோரிக்கைகளையும் நிராகரிக்கவேண்டும். அர்ச்சகருக்கு தமிழில் தெரிந்தால் செய்யட்டும். மற்றபடி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆகமங்களையும், மந்திரங்களையும் நாம் காப்பாற்றாவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்கள்? வேத மதத்தார் தமிழில் எழுதியிருக்கும் பக்திப் பாடல்களை பிராமண அர்ச்சகர்கள் தேவையான அளவு பாடுகிறார்கள். அதுவே போதுமானது.
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Wednesday, February 04, 2009
Wednesday, January 14, 2009
இந்தியத் திருநாள் வாழ்த்துகள்!
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.
தீபாவளி இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும், காரணமும் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. புத்தாண்டும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் அவரவர் பயன்படுத்தும் நாட்காட்டி கொண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொண்டாடப் படுவதன் காரணமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முற்றும் வேறுபட்டிருக்கிறது.
இந்தியாவில் சங்கராந்தி எந்த பகுதியில், என்ன பெயரில், எவ்வாறு கொண்டாப் படுகிறது என்கிற பட்டியல் கீழே! எல்லா பகுதிகளிலுமே சூரியன் மகரரேகையிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும் நாள்தான் திருநாள். உழவர்கள் அறுவடை முடிந்த சந்தோஷத்தில் கொண்டாடுவதே காரணம்.
தெற்கு:
1. தமிழகம் - பொங்கல் - முதல் நாள் போகியன்று நெர்களைந்த கதிர்களை தீயிட்டு கொளுத்தி சுத்தம் செய்து, அடுத்த தினம் பொங்கலிட்டு சூரியனை வழிபடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் மாட்டுப்பொங்கலாகவும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகின்றன.
2. ஆந்திரா - பெத்த பண்டுகா - தமிழகத்தை போன்றே போகி, சங்கராந்தி, கணுமா, முக்கணுமா என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். பட்டம் விடுதலும் உண்டு.
3. கர்நாடகம் - சங்கராந்தி - எள்ளும், வெல்லமும் கலந்த 'எள்ளு-பெல்லா' என்ற திண்பண்டம் இங்கே சிறப்பு.
4. கேரளா - சங்கராந்தி - இங்கு சூரியனின் உத்தராயணம் கொண்டாடப்பட்டாலும் அது உழவர் திருநாளாக இல்லை. ஓணமே அவர்களது உழவர் திருநாள்.
வடக்கு:
1. பஞ்சாப் - லோஹிரி/மகி - லோகிரியன்று தீயில் கறும்பு, அரிசி ஆகியவற்றை கொளுத்தி, சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுகிறார்கள். அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
2. உத்தராஞ்சல் - கூகுடியா - அரிசியும், பருப்பும் கலந்த கிச்சிடியை சூரியனுக்கு படைக்கின்றனர். 'காலே கவ்வா' (கருப்புக் காகம்) என்று குழந்தைகள் பாடி காகங்களை கிச்சிடி சாப்பிட அழைக்கின்றனர்.
3. உத்திர பிரதேசம் - கிச்சிடி - கங்கையில் குளித்து சூரியனைக் குறிக்கும் காயத்ரி மந்திரம் சொல்லி கிச்சிடி படைக்கிறார்கள்.
4. மத்திய பிரதேசம் - சுக்ராத் - இனிப்பு பலகாரங்கள் இங்கு சிறப்பு.
கிழக்கு:
1. அசாம் - உருகா/போகாலி பீகு - முதல் நாள் உருகாவில் 'பேலாகர்' என்ற சக்கைகளிலான வீடு கட்டப்பட்டு மேஜி என்ற பெயரில் தீ கொளுத்தப்படுகிறது. அடுத்த நாள் போகாலி பீகு அன்று சூரியனை வழிபடுகிறார்கள். படங்கள் இங்கே.
2. ஒரிசா - சங்கராந்தி - போகி எரித்தலும், மறுநாள் சூரிய வழிபாடும் இங்கும் உண்டு.
3. வங்காளம் - 'கங்கா சாகர்' என்று கங்கை கடலில் கலக்குமிடத்தில் வழிபடுவது இங்கு சிறப்பு.
மேற்கு:
1. மகாராஷ்டிரம் - சங்கராந்தி - எள்ளில் செய்யப்படும் 'தில்குல்' என்ற பண்டம் இங்கே சிறப்பு.
2. குஜராத் - உத்தராயன் - பட்டம் விடுதல் இங்கு விழாவின் முக்கிய அங்கம்.
படங்களுடன் இந்தியா முழுதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் விதங்களை விளக்கும் கட்டுரைகள் கீழே!
1. நிருபமா சிறீராம் என்பவரின் வலைப்பதிவில் இந்த இடுகை.
2. றீடிஃப் தளத்தில் புகைப்படங்கள் இங்கே.
3. இந்து யங் வேர்ல்டில் இந்த கட்டுரை.
பொங்கலோ பொங்கல்!
கொசுறு: பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் Pongkal என்று எழுதுவதுதான் சரியோ?
இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.
தீபாவளி இந்தியா முழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும், காரணமும் பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. புத்தாண்டும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் அவரவர் பயன்படுத்தும் நாட்காட்டி கொண்டு வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி கொண்டாடப் படுவதன் காரணமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முற்றும் வேறுபட்டிருக்கிறது.
இந்தியாவில் சங்கராந்தி எந்த பகுதியில், என்ன பெயரில், எவ்வாறு கொண்டாப் படுகிறது என்கிற பட்டியல் கீழே! எல்லா பகுதிகளிலுமே சூரியன் மகரரேகையிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும் நாள்தான் திருநாள். உழவர்கள் அறுவடை முடிந்த சந்தோஷத்தில் கொண்டாடுவதே காரணம்.
தெற்கு:
1. தமிழகம் - பொங்கல் - முதல் நாள் போகியன்று நெர்களைந்த கதிர்களை தீயிட்டு கொளுத்தி சுத்தம் செய்து, அடுத்த தினம் பொங்கலிட்டு சூரியனை வழிபடுகிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் மாட்டுப்பொங்கலாகவும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகின்றன.
2. ஆந்திரா - பெத்த பண்டுகா - தமிழகத்தை போன்றே போகி, சங்கராந்தி, கணுமா, முக்கணுமா என்று நான்கு நாட்கள் கொண்டாடுகிறார்கள். பட்டம் விடுதலும் உண்டு.
3. கர்நாடகம் - சங்கராந்தி - எள்ளும், வெல்லமும் கலந்த 'எள்ளு-பெல்லா' என்ற திண்பண்டம் இங்கே சிறப்பு.
4. கேரளா - சங்கராந்தி - இங்கு சூரியனின் உத்தராயணம் கொண்டாடப்பட்டாலும் அது உழவர் திருநாளாக இல்லை. ஓணமே அவர்களது உழவர் திருநாள்.
வடக்கு:
1. பஞ்சாப் - லோஹிரி/மகி - லோகிரியன்று தீயில் கறும்பு, அரிசி ஆகியவற்றை கொளுத்தி, சுற்றி வந்து பாட்டுப்பாடி நடனமாடுகிறார்கள். அடுத்த நாள் மகி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
2. உத்தராஞ்சல் - கூகுடியா - அரிசியும், பருப்பும் கலந்த கிச்சிடியை சூரியனுக்கு படைக்கின்றனர். 'காலே கவ்வா' (கருப்புக் காகம்) என்று குழந்தைகள் பாடி காகங்களை கிச்சிடி சாப்பிட அழைக்கின்றனர்.
3. உத்திர பிரதேசம் - கிச்சிடி - கங்கையில் குளித்து சூரியனைக் குறிக்கும் காயத்ரி மந்திரம் சொல்லி கிச்சிடி படைக்கிறார்கள்.
4. மத்திய பிரதேசம் - சுக்ராத் - இனிப்பு பலகாரங்கள் இங்கு சிறப்பு.
கிழக்கு:
1. அசாம் - உருகா/போகாலி பீகு - முதல் நாள் உருகாவில் 'பேலாகர்' என்ற சக்கைகளிலான வீடு கட்டப்பட்டு மேஜி என்ற பெயரில் தீ கொளுத்தப்படுகிறது. அடுத்த நாள் போகாலி பீகு அன்று சூரியனை வழிபடுகிறார்கள். படங்கள் இங்கே.
2. ஒரிசா - சங்கராந்தி - போகி எரித்தலும், மறுநாள் சூரிய வழிபாடும் இங்கும் உண்டு.
3. வங்காளம் - 'கங்கா சாகர்' என்று கங்கை கடலில் கலக்குமிடத்தில் வழிபடுவது இங்கு சிறப்பு.
மேற்கு:
1. மகாராஷ்டிரம் - சங்கராந்தி - எள்ளில் செய்யப்படும் 'தில்குல்' என்ற பண்டம் இங்கே சிறப்பு.
2. குஜராத் - உத்தராயன் - பட்டம் விடுதல் இங்கு விழாவின் முக்கிய அங்கம்.
படங்களுடன் இந்தியா முழுதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும் விதங்களை விளக்கும் கட்டுரைகள் கீழே!
1. நிருபமா சிறீராம் என்பவரின் வலைப்பதிவில் இந்த இடுகை.
2. றீடிஃப் தளத்தில் புகைப்படங்கள் இங்கே.
3. இந்து யங் வேர்ல்டில் இந்த கட்டுரை.
பொங்கலோ பொங்கல்!
கொசுறு: பொங்கல் என்பதை ஆங்கிலத்தில் Pongkal என்று எழுதுவதுதான் சரியோ?
Saturday, October 25, 2008
கொடுத்தாய் வாழி இந்தியா!
மிண்ட் பத்திரிக்கையில் இன்று வெளியான நிரஞ்சன் ராஜதக்ஷாவின் கட்டுரை மிகவும் சிந்திக்க வைத்தது.
உலகின் முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, அவற்றின் இயலுமை வரிசையில் கோபன்ஹேகன் இணக்க முடிவு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையின்படி குழந்தைகளுக்கு உயிர்சத்து மாத்திரைகள் வழங்குவது உலக வெம்மையை தடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைவிடவும் அதிக பலனளிக்கக்கூடியது என்று தெரிகிறது.
இன்றைய மிண்டில் குழந்தைகள் நலன் மற்றும் பிற விசயங்களுக்காக உழைக்கும் பல தொண்டு நிறுவனங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் சேகரித்த பட்டியல் கீழே.
Meljol, Mumbai.
Able Disabled All People Together (ADAPT), Mumbai.
Action for Ability Development and Inclusion (AADI), Delhi.
Spastics Society of Karnataka, Bengaluru.
Vidya Sagar, Chennai.
SOS Children's Villages of India, Delhi.
Balagurukulam, Chennai.
Room to read, Delhi.
Akshara Foundation, Bengaluru.
Association of Writers and Illustrators for Children, Delhi.
Pratham, Mumbai.
Pankhudi, Bengaluru.
The Blind Relief Association, Delhi.
National Association of the Blind, Mumbai.
Esha - People for the Blind
Mumbai Mobile Creche
Door step School, Mumbai.
Deepalaya, Delhi.
Akanksha, Mumbai and Pune.
Butterflies, Delhi.
Make-a-wish Foundation, Delhi.
Cancer Foundation of India, Kolkata.
Cancer Patients Aid Association (CPAA), Mumbai.
Arushi (Salaam Baalak Trust), Gurgaon.
Pranab Kanya Sangha, Kolkata.
Parikrma, Bengaluru.
Nanhi Kali, Mumbai.
Jamghat, Delhi.
Aasra, Mumbai.
Lifeline Foundation, Kolkata.
Childline India Foundation, Mumbai.
Roshni, Secunderabad.
Sneha, Chennai.
Maithri, Kochi.
Sumaitri, Delhi.
Naz Care Home, Delhi.
The Freedom Foundation.
Manavya, Pune.
Child Survival India, Delhi.
உலகின் முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, அவற்றின் இயலுமை வரிசையில் கோபன்ஹேகன் இணக்க முடிவு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையின்படி குழந்தைகளுக்கு உயிர்சத்து மாத்திரைகள் வழங்குவது உலக வெம்மையை தடுக்கும் முயற்சிகளுக்கு உதவுவதைவிடவும் அதிக பலனளிக்கக்கூடியது என்று தெரிகிறது.
இன்றைய மிண்டில் குழந்தைகள் நலன் மற்றும் பிற விசயங்களுக்காக உழைக்கும் பல தொண்டு நிறுவனங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். நான் சேகரித்த பட்டியல் கீழே.
Meljol, Mumbai.
Able Disabled All People Together (ADAPT), Mumbai.
Action for Ability Development and Inclusion (AADI), Delhi.
Spastics Society of Karnataka, Bengaluru.
Vidya Sagar, Chennai.
SOS Children's Villages of India, Delhi.
Balagurukulam, Chennai.
Room to read, Delhi.
Akshara Foundation, Bengaluru.
Association of Writers and Illustrators for Children, Delhi.
Pratham, Mumbai.
Pankhudi, Bengaluru.
The Blind Relief Association, Delhi.
National Association of the Blind, Mumbai.
Esha - People for the Blind
Mumbai Mobile Creche
Door step School, Mumbai.
Deepalaya, Delhi.
Akanksha, Mumbai and Pune.
Butterflies, Delhi.
Make-a-wish Foundation, Delhi.
Cancer Foundation of India, Kolkata.
Cancer Patients Aid Association (CPAA), Mumbai.
Arushi (Salaam Baalak Trust), Gurgaon.
Pranab Kanya Sangha, Kolkata.
Parikrma, Bengaluru.
Nanhi Kali, Mumbai.
Jamghat, Delhi.
Aasra, Mumbai.
Lifeline Foundation, Kolkata.
Childline India Foundation, Mumbai.
Roshni, Secunderabad.
Sneha, Chennai.
Maithri, Kochi.
Sumaitri, Delhi.
Naz Care Home, Delhi.
The Freedom Foundation.
Manavya, Pune.
Child Survival India, Delhi.
Tuesday, March 04, 2008
கிரிக்கெட் என்னும் அரக்கன்!
கிரிக்கெட் என்னும் விளையாட்டு இரண்டு வேலை உணவுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடும் கோடிக்கணக்கானோரின் முகத்தில் பூசப்படும் கரியாகி வருகிறதா? Cricinfo வில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை சிந்திக்கத் தக்கது.
ஆறு பந்தில் சிக்ஸர் அடித்ததற்காக யுவராஜ் சிங்கிற்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்தது. சும்மா ஒரு மூன்று நாடுகள் போட்டியில் நேற்று வென்றதற்கே பத்து கோடி உரூபாய் பரிசு அறிவித்திருப்பது. பத்து காசு கேட்டு குழந்தையுடன் பிச்சை எடுக்கும் சிறுமிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்படும் மும்பை நகரின் மற்றொரு பகுதியில் பல கோடி உருபாய்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஏலமிடப்படுவது, அது பெருமையாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது.
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் யாராவது இன்னும் இருந்தால், இந்த capitalist கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். ஒரு சின்ன யோசனை. வருகிற ஏப்ரல் மே மாதங்களில் நடக்கவிருக்கும் IPL என்னும் அசிங்கத்தை புறக்கணிப்போம்! அதன் மூலம் நாம் சேமிக்கும் மின்சாரம், மைதான சீட்டு பணம், நமது நேரம் ஆகியவற்றுக்கு ஈடான ஒரு தொகையை, ஸ்டீவ் வாவ் பிரபலப்படுத்திய உதயன் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவோம்.
ஆறு பந்தில் சிக்ஸர் அடித்ததற்காக யுவராஜ் சிங்கிற்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்தது. சும்மா ஒரு மூன்று நாடுகள் போட்டியில் நேற்று வென்றதற்கே பத்து கோடி உரூபாய் பரிசு அறிவித்திருப்பது. பத்து காசு கேட்டு குழந்தையுடன் பிச்சை எடுக்கும் சிறுமிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்படும் மும்பை நகரின் மற்றொரு பகுதியில் பல கோடி உருபாய்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஏலமிடப்படுவது, அது பெருமையாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது.
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் யாராவது இன்னும் இருந்தால், இந்த capitalist கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். ஒரு சின்ன யோசனை. வருகிற ஏப்ரல் மே மாதங்களில் நடக்கவிருக்கும் IPL என்னும் அசிங்கத்தை புறக்கணிப்போம்! அதன் மூலம் நாம் சேமிக்கும் மின்சாரம், மைதான சீட்டு பணம், நமது நேரம் ஆகியவற்றுக்கு ஈடான ஒரு தொகையை, ஸ்டீவ் வாவ் பிரபலப்படுத்திய உதயன் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவோம்.
Thursday, February 21, 2008
இப்படிக்கு ரோஸ்!
"இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ..." என்னும் எரிச்சலூட்டும் விளம்பரம் இந்த முறை உண்மையாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியில் ஒரு திருநங்கை நடத்தும் 'இப்படிக்கு ரோஸ்' என்னும் நிகழ்ச்சி வரப்போகிறதாம். பாராட்டுகள்!
Friday, November 30, 2007
அ-சமத்துவபுரம்?
Thursday, November 29, 2007
இன்று மலேசியா, நாளை தமிழகம்?
மலேசியத் தமிழர்கள் இனரீதியிலான இடஒதுக்கீடு, பொருளாதாரப் பங்கீட்டுக் கொள்கைகளால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற விசயமே எனக்கு இப்போதுதான் தெரிந்தது. அதற்காக வருந்துகிறேன். அவர்களின் அறப்போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். அவர்கள் சில கிறுக்கத்தனமான கோரிக்கைகளைக் கைவிடுவது அவர்களின் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.
நிற்க. பெரும்பான்மை மக்கள் காலம் கடந்து இடஒதுக்கீடு பெறுவது எப்படி தவறாக முடியும் என்பதை மலேசிய நிலைமை எடுத்துரைக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்திலும் இந்த மாதிரி நிலைமை வரலாம். இன்றைய நிலையில் தமிழக சாதிவாரி ஒதுக்கீட்டு அளவு நியாயமாகத்தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் தமிழரின் பொருளாதார நிலை மேம்படும்போது சிலர் தேவையில்லாமல் தண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம்.
இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சியில் முன்னோடியாகத் திகழும் தமிழகம், சாதிவாரி இடஒதுக்கீடு இனி தேவையில்லை என்று நிர்ணயிக்கும் முடிவை சரியான தருணத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன். முதல் காரியமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் தேவையானவர்களுக்கு பயன்கள் போய்ச் சேருகிறதா, இல்லை அவர்கள் இடுக்கில் விழுந்துவிட்டார்களா என்று அறிய முயற்சிகள் எடுக்கவேண்டும்.
நிற்க. பெரும்பான்மை மக்கள் காலம் கடந்து இடஒதுக்கீடு பெறுவது எப்படி தவறாக முடியும் என்பதை மலேசிய நிலைமை எடுத்துரைக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்திலும் இந்த மாதிரி நிலைமை வரலாம். இன்றைய நிலையில் தமிழக சாதிவாரி ஒதுக்கீட்டு அளவு நியாயமாகத்தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஆனால் தமிழரின் பொருளாதார நிலை மேம்படும்போது சிலர் தேவையில்லாமல் தண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம்.
இடஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சியில் முன்னோடியாகத் திகழும் தமிழகம், சாதிவாரி இடஒதுக்கீடு இனி தேவையில்லை என்று நிர்ணயிக்கும் முடிவை சரியான தருணத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன். முதல் காரியமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களில் தேவையானவர்களுக்கு பயன்கள் போய்ச் சேருகிறதா, இல்லை அவர்கள் இடுக்கில் விழுந்துவிட்டார்களா என்று அறிய முயற்சிகள் எடுக்கவேண்டும்.
Tuesday, November 27, 2007
இவர்களும் இந்தியர்கள்தான் ...
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் ஒரு ஆதிவாசிப் பெண்ணுக்கு நாகரிகம் தெரிந்த இந்தியர்கள் கொடுத்த 'தண்டனை', அவரது உடைகளைக் கலைந்து அவமானப் படுத்தியதுதான்! அந்தப் பெண் உள்ளிட்ட பல ஆதிவாசிகள் தங்களை பழங்குடியினராக (Scheduled Tribe) அறிவிக்கக்கோரி வன்முறையுடன் போராடினார்களாம். அதற்காக இந்த பதிலடி. இது நடந்தபோது சுற்றி நின்று படம்பிடித்த இளைஞர்கள்தான் நாளைய இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள். உருப்பட்ட மாதிரிதான்.
Saturday, November 17, 2007
சாவதற்கென்றே பிறந்தோம்...

சிதர் என்று பெயரிடப்பட்டள்ள புயல் பங்களாதேஷைத் தாக்கி ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலிகொண்டிருக்கிறது. 'வருங்கால வல்லரசான' இந்தியா ஆபத்திலிருப்போரைக் காப்பாற்றவும், மீட்புப் பணியிலும் விரைந்து இறங்கியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இல்லை!
இந்தியாவின் தமாசு பத்திரிக்கைகள் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவர்கள் பங்களாதேஷ் பற்றி தெரிவிக்கவோ, கவலை கொள்ளவோ இல்லை. இந்தியா தப்பித்ததை இரண்டு நாட்களுக்குக் கொண்டாடிவிட்டு, இராகுல் காந்திக்கு முடிசூடக் கிளம்பிவிட்டன! வெட்கம் கெட்டவர்கள்.
ஆனால் நல்லெண்ணம் கொண்டவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். Scienceblogs என்னும் வலைப்பதிவில் கடந்த சில நாட்களாக புயல் அபாயம் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்தும் எழுதிவருகிறார்கள்.
அபாயம் வருகிறதென்று நன்கு தெரிந்திருந்தும், அரசாங்கங்களும், ஊடகங்களும் மெத்தனமாக இருந்ததால், பலியான நூற்றுக் கணக்காணோர் சாவதற்கே பிறந்தனரோ? உயிர் பிழைத்தவர்களையாவது காப்பாற்றுவோம் வாருங்கள்.
Tuesday, October 30, 2007
மக்கள் தீர்ப்பே...
ஜனாதேஷ் (மக்கள் தீர்ப்பு) என்னும் இயக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது! சமீபத்தில் சுமார் 25000 நிலமற்ற விவசாயிகள் (தலித்துகள்?) மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரிலிருந்து தில்லிக்கு நடந்தே வரும் சத்தியாகிரகம் செய்து அசத்தியிருக்கிறார்கள். இன்று இந்தியாவெங்கும் நிலமே பெரும் பிரச்சனையாகி வருவது நாம் அறிந்ததே.
தூத்துக்குடியிலிருந்து நந்திகிராம் வரை வெடித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கும், நாடேங்கும் பரவிவிட்டிருக்கும் நக்ஸல்வாதத்திற்கும் அடிப்படைக் காரணம் விவசாயிகளின் நில உரிமைப் பிரச்சனைகளே. ஆனால் நம்மில் பலருக்கு விசயத்தின் தீவிரம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஏக்தா பரிஷ்த் என்னும் அமைப்பு இந்தியாவின் ஏழை விவசாயிகள், தன்னார்வளர்கள் துணையோடு இந்த ஜனாதேஷ் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பாராட்டவேண்டிய, சிந்திக்கவேண்டிய விசயம்.
போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் இங்கே. நிதின் சுட்டிக்காட்டிய 'தேசிய நிலக் கொள்கை' இங்கே.
தூத்துக்குடியிலிருந்து நந்திகிராம் வரை வெடித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கும், நாடேங்கும் பரவிவிட்டிருக்கும் நக்ஸல்வாதத்திற்கும் அடிப்படைக் காரணம் விவசாயிகளின் நில உரிமைப் பிரச்சனைகளே. ஆனால் நம்மில் பலருக்கு விசயத்தின் தீவிரம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஏக்தா பரிஷ்த் என்னும் அமைப்பு இந்தியாவின் ஏழை விவசாயிகள், தன்னார்வளர்கள் துணையோடு இந்த ஜனாதேஷ் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பாராட்டவேண்டிய, சிந்திக்கவேண்டிய விசயம்.
போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் இங்கே. நிதின் சுட்டிக்காட்டிய 'தேசிய நிலக் கொள்கை' இங்கே.
Friday, October 26, 2007
நெஞ்சு பொறுக்குதில்லையே...
... இந்த இந்துமத வெறிபிடித்தக் கயவர்களை நினைத்துவிட்டால்... தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ள குஜராத் 2002 கலவரங்கள் பற்றிய விவரங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. ஒரு தாயின் வயிற்றிலிருந்த கருவைக்கூட விட்டுவைக்கவில்லை இவர்கள். இந்தப்பாவிகளில் பலர் அதற்கான தண்டனையை அனுபவிக்கப் போவதில்லை என்பது இன்றும் நடந்துவரும் கலவரம்தான்.
Thursday, October 18, 2007
Thursday, October 11, 2007
இந்தியர் என்னும் குரங்குகள்...
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
தம்மில் சிலரை சூத்திரராக்கினர்!
ஆபத்துக்குதவிய அனுமனை,
இராமாயணத்தில் வானரனாக்கினர்!
சிறிசந்தின் குரங்கு நடனத்தை,
யூடூபில் பார்த்து ரசித்தனர்!
நேற்று சைமண்ட்சு மீது இனவெறி காட்டி,
தாம் குரங்கென நிரூபித்தனர் இந்தியர்!
தம்மில் சிலரை சூத்திரராக்கினர்!
ஆபத்துக்குதவிய அனுமனை,
இராமாயணத்தில் வானரனாக்கினர்!
சிறிசந்தின் குரங்கு நடனத்தை,
யூடூபில் பார்த்து ரசித்தனர்!
நேற்று சைமண்ட்சு மீது இனவெறி காட்டி,
தாம் குரங்கென நிரூபித்தனர் இந்தியர்!
Tuesday, October 09, 2007
வேதனை வென்ற கணம்..
...விவசாயி உயிரை மாய்த்த கணம், நம் இந்தியா தோற்கும் அதே கணம். 8 மணி நேரத்துக்கு ஒருமுறை இந்தியா தோற்பதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களில் நான் காபிக்கு செலவழித்த பணம் சிலரின் கடன்களை அடைக்கப் போதுமாயிருந்திருக்கும்...
காந்தி ஜெயந்தியன்று AID India அமைப்பு நடத்திய தீபாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது திரையிடப்பட்ட 'The Dying Fields' விவரணப்படத்தை பார்த்தேன்.
இந்திய விவசாயப் பேரழிவு குறித்து இங்கு படிக்கலாம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமருக்கு இங்கு வேண்டுகோள் விடுக்கலாம். விவசாயிகள் மாண்டுகொண்டிருக்க யுவராஜ் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த விவசாய அமைச்சர்/கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரத் பவார் குறித்து சோசிக்கலாம்...
காந்தி ஜெயந்தியன்று AID India அமைப்பு நடத்திய தீபாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது திரையிடப்பட்ட 'The Dying Fields' விவரணப்படத்தை பார்த்தேன்.
இந்திய விவசாயப் பேரழிவு குறித்து இங்கு படிக்கலாம். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமருக்கு இங்கு வேண்டுகோள் விடுக்கலாம். விவசாயிகள் மாண்டுகொண்டிருக்க யுவராஜ் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த விவசாய அமைச்சர்/கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரத் பவார் குறித்து சோசிக்கலாம்...
Subscribe to:
Posts (Atom)
