Monday, March 31, 2008

கிழக்கே போகும் சனநாயகம்!

ம்... தொடர்ந்து ஈழம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேனோ? பிரபாகரனை அழிப்பதில் வருகிற மே 10 கிழக்கு மாகாணத் தேர்தல் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. நான் போன வார இடுகையின் பின்னூட்டப் பக்கத்தில் குறிப்பிட்டது போல, விடுதலைப் புலிகளுக்கு சாவு மணி அடித்தாகிவிட்டது. அதன் ஓலம் தமிழகத்திலும் ஒலிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை தெரிந்தோ தெரியாமலோ புலிகளுடன் சேர்ந்து ஈழத்தமிழருக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாயிருக்கின்றன. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

வருகிற தேர்தல்கள் குறித்து இன்றைய இந்து நாளிதழ் தலையங்கம் இங்கே. விடுதலைப் புலிகளின் எடுபுடிகளான தமிழ் தேசிய கூட்டனி தவிர்த்த எல்லா கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இழக்கு மாகாணத் தமிழரும், இந்தியா மற்றும் உலகத் தமிழர் அனைவரும் சேர்ந்து ஒரே அடியாக புலிகளைத் தலைமுழுக வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (கருணா, பிள்ளையன்), முக்கட்சி கூட்டனி (PLOTE, அனந்தசங்கரியின் TULF, EPRLF-Padmanaba Wing) மற்றும் டக்ளஸ் தேவானந்தாவின் EPDP ஆகியவற்றுக்கு எனது ஆதரவும் வாழ்த்துகளும்!

விவரம் புரியாதவர்களுக்கு: இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் 13ஆம் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் இந்த மாகாணங்களைக் கொண்டுவந்தது. இவற்றில் இரண்டு மாகாணங்கள் ஈழத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்பு முதல் முறையாக அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஈழமக்கள் கொடுத்து வைத்திருந்தால் வடக்கு மாகாணத்திலும் புலிகள் வேரறுக்கப்பட்டு அங்கும் தேர்தல் நடத்தும் நிலை வரலாம்.

Thursday, March 27, 2008

'பிரபாகரன்' வளர்க! பிரபாகரன் ஒழிக!



மேலுள்ள நிகழ்படத்தில் சிதறும் பெண் சீமானின் அல்லது சுப. வீரபாண்டியனின் சகோதிரியாக இருந்திருந்தால் அவர்கள் சமீபத்திய தீவிரவாத ஆதரவு ரவுடித்தனத்தில் இறங்கியிருப்பார்களா? எவனோ, எவளோ சாகிறான். சும்மா வேலையில்லாமல் இருப்பதால் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் இந்த அல்லக்கைகளுக்கு சில உயிர்கள் காப்பாற்றப்படுவது பொறுக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் மூளைச்சலவை செய்யப்பட்டு தேவையில்லாமல் பலிகொடுக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்த விசயம்தான். பலியாடாகத் தேர்வு செய்யப்பட்டு பின் மனதை மாற்றிக்கொண்ட பின்பும், வெடித்துத்தான் ஆகவேண்டும் என்னும் புலிகளின் கொலைமுயற்சியிலிருந்து தப்பிவந்த சில தமிழரின் கதையை ஒரு சிங்களர் படமாக எடுத்திருக்கிறார். அந்த இயக்குனருக்கு சென்னையில் அடி, உதை! உண்மை வெளிவரக்கூடாது என்பதில் ஒரு செய்தியாளருக்கும், இன்னொரு கலைஞனின் படம் வெளியாகக்கூடாது என்பதில் ஒரு இயக்குனருக்கும் எவ்வளவு அக்கறை!

சமீபத்தில் ஈராக்கில் மனநலம் குன்றிய பெண்களின் உடம்பில் வெடிமருந்துகளை கட்டியனுப்பி தூரத்திலிருந்து வெடிக்கவைத்தார்கள். அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன வித்தியாசம்? மேலுள்ள ஒளித்துண்டில்கூட அந்த பெண் தான் கொல்லவந்த மனிதர் அலுவலகத்தில் இல்லை என்று தெரிந்தும், சும்மா வந்துவிட்டோமே என்பதற்காக யாரோ ஒருவரைக் கொன்று தானும் சாகிறாள். இதுதான் சுதந்திர போராட்டமா?

ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். சாக விரும்பாதவர்களை மூளைச்சலவை செய்து சாக அனுப்பும் புலிகள் கடைசியில் அந்த பலியாட்டை பிரபாகரனோடு எதற்கு சாப்பிட அனுப்புகிறார்கள்? கடந்த இருபது ஆண்டுகளில் சண்டையே போடாமல் ஒளிந்துகொண்டு, தின்று தின்று பன்றி போல உடம்பை வைத்திருக்கும் அந்த கோழையைப் போய்ப் பார்த்தால், அதுவும் அவன் தின்றுகொண்டிருக்கும்போது பார்த்தால் ஏற்றியிருக்கும் மூளைச்சலவை இறங்கிவிடாதா?

Saturday, March 15, 2008

சங்கே முழங்கு!



தர்மசாலாவில் இருந்து இயங்கும் திபெத் அரசு இங்கே. திபெத் நன்பர்களின் தளம் இங்கே.

Friday, March 14, 2008

தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு!

ம்... ஈழத்தமிழரை அழித்தொழிக்கும் அந்த கெட்ட புலிகள் அல்ல! தமிழகக் காடுகளில் உலவும் நல்ல புலிகளைத் தான் சொல்கிறேன். இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்து சுமார் 1400 புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக சமிபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் தமிழகத்தில் ஒரு வேளை புலிகளைக் காப்பற்றும் முயற்சிகள் வேலை செய்ய ஆரம்பித்திருக்கலாம். தமிழகத்தில் தற்போது சுமார் 65-86 புலிகள் மீதமிருப்பதாகத் தெரிகிறது. இது பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய செய்தியில்லை என்றாலும் இருந்த புலிகளும் அழிந்தன என்று செய்தி வராமல் இருப்பதே பெரிய விசயம்.

புலிகள் விசயத்தில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இங்கேயும் வாங்க -> புலிகள் திட்டம், உலக வனவிலங்கு ஆணையத்தின் கையெழுத்து இயக்கம்.

அப்புறம், எவ்வளவு நாளைக்குத்தான் ஆர்க்கூட்டிலும், யூடூபிலும் பழியாய் கிடப்பீங்க. Connet2Earthத்துக்கும் வாங்க!

Monday, March 10, 2008

தமிழா இசையா?

கர்னாடக இசையில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று பல காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நான்கூட இது பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். இதற்கு எதிர்விவாதமாக ராம் சிறிராம் என்பவர் எழுதிய கட்டுரை இங்கே. தமிழில் பாடல்களே இல்லை என்னும் விதண்டாவாதத்தை விட இவரது கட்டுரை சற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

முன்பைவிட இப்போது நிலைமை சற்று தேறிவருகிறது என்றுதான் நினைக்கிறேன். சென்னை சங்கமத்தில் கர்னாடக இசையும் இடம்பெற்றிருப்பது நல்லதே. அருணா சாய்ராம் போன்றவர்கள் பழந்தமிழ் பாடல்களை கச்சேரிகளில் பாடுகிறார்கள்.

கர்னாடக இசையும் தமிழரின் இசையே (?!) என்னும் நிலை வரவேண்டுமானால் கர்னாடக இசைக் கச்சேரிகளுக்கென்றே நிறைய புதிய தமிழ் பாடல்கள் எழுதப்படவேண்டும். திரைப்படங்களுக்கெல்லாம் எழுதும் கவிஞர்களால் கர்னாடக இசைக்கு எழுதமுடியாதா என்ன?

Tuesday, March 04, 2008

கிரிக்கெட் என்னும் அரக்கன்!

கிரிக்கெட் என்னும் விளையாட்டு இரண்டு வேலை உணவுக்கு வழியில்லாமல் வறுமையில் வாடும் கோடிக்கணக்கானோரின் முகத்தில் பூசப்படும் கரியாகி வருகிறதா? Cricinfo வில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை சிந்திக்கத் தக்கது.

ஆறு பந்தில் சிக்ஸர் அடித்ததற்காக யுவராஜ் சிங்கிற்கு ஒரு கோடி உரூபாய் கொடுத்தது. சும்மா ஒரு மூன்று நாடுகள் போட்டியில் நேற்று வென்றதற்கே பத்து கோடி உரூபாய் பரிசு அறிவித்திருப்பது. பத்து காசு கேட்டு குழந்தையுடன் பிச்சை எடுக்கும் சிறுமிகள் ஒவ்வொரு தெருவிலும் தென்படும் மும்பை நகரின் மற்றொரு பகுதியில் பல கோடி உருபாய்களுக்கு விளையாட்டு வீரர்கள் ஏலமிடப்படுவது, அது பெருமையாக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது.

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் யாராவது இன்னும் இருந்தால், இந்த capitalist கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம். ஒரு சின்ன யோசனை. வருகிற ஏப்ரல் மே மாதங்களில் நடக்கவிருக்கும் IPL என்னும் அசிங்கத்தை புறக்கணிப்போம்! அதன் மூலம் நாம் சேமிக்கும் மின்சாரம், மைதான சீட்டு பணம், நமது நேரம் ஆகியவற்றுக்கு ஈடான ஒரு தொகையை, ஸ்டீவ் வாவ் பிரபலப்படுத்திய உதயன் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவோம்.

இந்து சமவெளியினர் திராவிடரா?

ஆ! சும்மா கவணத்தை கவர்வத்றகாக வைத்த தலைப்புதான்! ஃபின்லாந்து நாட்டு இந்திய ஆய்வாளர் (Indologist) அஸ்கோ பார்போலாவின் பேட்டி இந்து நாளிதழில் வந்திருக்கிறது. இங்கே.

இந்து சமவெளி எழுத்துகள் ஒரு திராவிட மொழியை எழுதப் பயன்பட்டிருக்கலாம் என்றும், தமிழகத்தில் ஜைமினி சாம வேதம் காப்பாற்றப்படுவது குறித்தும், தமிழக பழங்குடியின மக்களின் மொழி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை பதிவு செய்து, அதிலிருந்து இந்தியாவின் மிகத்தொன்மையான வரலாற்றை அறிய முயலவேண்டுமென்றும் பேராசிரியர் பார்போலோ தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.