Tuesday, October 30, 2007

மக்கள் தீர்ப்பே...

ஜனாதேஷ் (மக்கள் தீர்ப்பு) என்னும் இயக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது! சமீபத்தில் சுமார் 25000 நிலமற்ற விவசாயிகள் (தலித்துகள்?) மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரிலிருந்து தில்லிக்கு நடந்தே வரும் சத்தியாகிரகம் செய்து அசத்தியிருக்கிறார்கள். இன்று இந்தியாவெங்கும் நிலமே பெரும் பிரச்சனையாகி வருவது நாம் அறிந்ததே.

தூத்துக்குடியிலிருந்து நந்திகிராம் வரை வெடித்துக் கொண்டிருக்கும் போராட்டங்களுக்கும், நாடேங்கும் பரவிவிட்டிருக்கும் நக்ஸல்வாதத்திற்கும் அடிப்படைக் காரணம் விவசாயிகளின் நில உரிமைப் பிரச்சனைகளே. ஆனால் நம்மில் பலருக்கு விசயத்தின் தீவிரம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஏக்தா பரிஷ்த் என்னும் அமைப்பு இந்தியாவின் ஏழை விவசாயிகள், தன்னார்வளர்கள் துணையோடு இந்த ஜனாதேஷ் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பாராட்டவேண்டிய, சிந்திக்கவேண்டிய விசயம்.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் இங்கே. நிதின் சுட்டிக்காட்டிய 'தேசிய நிலக் கொள்கை' இங்கே.

No comments: