Wednesday, November 28, 2007

தமிழகம் என்னும் மாயா உலகம்!


மைக்கேல் வுட் என்னும் வரலாற்று அறிஞர் சென்னையைப் பற்றி எழுதியதை நேற்று சுட்டியிருந்தேன். இன்று அவரின் மற்றொரு கட்டுரையைப் படித்தேன்.

கொல்லம் மெயிலேறி மதுரை, தஞ்சை, மாயவரம், குடந்தை, சிதம்பரம், புதுவை என்று அவர் அடுக்கிக்கொண்டே போக, என் மண்ணின் வாசம் வந்து நெஞ்சை முட்டுகிறது! ம்... இப்போதைக்கு கடந்த முறை தஞ்சை பெரிய கோவிலில் நான் எடுத்த படங்களைப் பார்த்து திருப்தியடைய வேண்டியதுதான்.

மைக்கேல் மாயா விஷன் மற்றும் பிபிசி 2 ஆகியோருக்காகச் செய்த 'இந்தியாவின் கதை' என்ற தொடருக்காகத்தான் மாயா உலகில் சுற்றியிருக்கிறார். கொடுத்து வைத்தவர்!

படம்: நன்றி மாயாவிஷன்.

No comments: