பர்மாவின் ரங்கோன், இர்ராவாடி மாகாணங்களை நர்கிஸ் என்னும் புயல் தாக்கியதாலும், புயலினால் கரையோரப் பகுதிகளை கடல் கொண்டதினாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 22000 பேர் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவுவது நமது கடமை. கேர் அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம்.
இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சீரழிவுகள் ஏற்படும்போது முன்னின்று உதவுவது இந்திய அரசின் அத்தியாய கடமை என்பது தில்லியில் உள்ள மரமண்டைகளுக்கு எப்போதுமே தோன்றுவதில்லை. வங்காள தேசம், பாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீர், இலங்கை, இந்தோனேசியா என்று சமீபத்தில் நடந்த பேரழிவுகளில் இந்தியாவின் உதவி மிகவும் சொர்ப்பமே.
உலக நாடுகள் பலவும் பர்மாவின் இராணுவ ஆட்சியை எதிர்ப்பதால் வரிந்து உதவ வரப்போவதில்லை. பர்மாவோடு ஓரளவு உறவு வைத்துள்ள பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால் நமது தார்மீகக் கடமை மேலும் அதிகம்.
No comments:
Post a Comment