"ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்." -- ஜெயலலிதா.
வாவ்! இதுவல்லவா பேட்டி. ஓட்டுக்காகவும், புலிகளிடமிருந்து கிடைக்கும் பணத்துக்காகவும் உண்மையை விலைபேசும், இனவெறி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையாகப் பேசும் ஜெயலலிதா பாராட்டப்பட வேண்டியவர்.
பி.கு: 1996 தேர்தலில் அதிமுக அரசை வெளியேற்ற நான் திமுகவிற்கு தேர்தல் வேலை செய்திருக்கிறேன். மற்றபடி தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது. திமுக, அதிமுக இரண்டுக்குமே நான் வெவ்வேறு தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன்.
ஜெயலலிதா கூறியது 100% உண்மை.
ReplyDelete