Wednesday, February 04, 2009

கற்றளி கோயில்கள் அறநிலையத்துறை வசம் வரவேண்டும்!

சிதம்பரம் நடராசர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என்று சமீபத்தில் வந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கற்றளியாயிருக்கும் எல்லா புராதனக் கோயில்களையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேன்டும்.

பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில்கள்மீது ஒரு சிலர் உரிமை கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இந்தக் கோயில்களில் மிகவும் அரிதானவற்றை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கவேண்டும். திருவண்ணாமலையில் நிகழ்ந்தது போன்று சில பெருச்சாலிக்கூட்டங்கள் சேர்ந்து தடைசெய்வதை அனுமதிக்கக்கூடாது.

கோயில் அர்ச்சகர் நியமனத்தில் சீர்திருத்தம் இன்னும் பேச்சளவிலேயே இருக்கிறது. இதுகுறித்து சில ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பதிவு இங்கே. சிவன், முருகன், அம்மன், அனுமார் கோயில்களில் பெரும்பாலானவற்றில் பிராமணர் அல்லாதவரே அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும்.

பெருமாள் கோயில்களில் வைஷ்ணவர்கள் (ஐயங்கார்) நியமிக்கப்படலாம். ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) எந்தக் கோயிலில் வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம். ஆனால் மொத்தப் பணியிடங்களில் பிராமணர் எண்ணிக்கை சுமார் 10 சதவீதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மேலும் தங்கள் வீட்டுக் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்த பிராமணரை அழைக்கும் அசிக்கத்தை தமிழகத்தார் முதலில் நிறுத்தவேண்டும். சம்பந்தமேயில்லாமல் பிராமணரை அழைக்கும் இவர்கள் முஸ்லீம் முல்லாக்களை ஏன் அழைப்பதில்லை என்று புரியவில்லை. ஆச்சாரிகள் உள்ளிட்ட சமூகத்தார் இது போன்று ஆரிய மோகம் கொண்டு அலைவதில்லை. வேத மதத்தின் சடங்குகளை பாதுகாக்கும் பொறுப்பு பிராமணருக்கு மட்டும் இருந்தால் போதுமானது.

மேலும் வேத மதத்துச் சடங்குகளை தமிழில் மட்டுமே செய்யவேண்டும் என்று கோரும் லூசுகளின் கோரிக்கைகளையும் நிராகரிக்கவேண்டும். அர்ச்சகருக்கு தமிழில் தெரிந்தால் செய்யட்டும். மற்றபடி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆகமங்களையும், மந்திரங்களையும் நாம் காப்பாற்றாவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்கள்? வேத மதத்தார் தமிழில் எழுதியிருக்கும் பக்திப் பாடல்களை பிராமண அர்ச்சகர்கள் தேவையான அளவு பாடுகிறார்கள். அதுவே போதுமானது.

Monday, February 02, 2009

புலிகளுக்கு முன் = புலிகளுக்குப் பின்?

இலங்கையின் சுதந்திர தினமான நாளை மறுநாள் (பிப்ரவரி 4) பிரபாகரன் ஒழிந்தான் என்பது உள்ளிட்ட எதாவது நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.

இலங்கையில் புலிகள் என்னும் பாசிச இனவெறிக் கும்பல் தோன்றுவதற்கு முன் தமிழரின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிங்களவர் மத்தியில்கூட ஆதரவு இருந்ததையும், பிரபாகரன் என்கிற தறுதலை தமிழருக்குக் கிடைத்த ஒவ்வொரு நல்வாய்ப்பையும் தன் சுயநலத்துக்காகக் கெடுத்ததையும் அயூப் சிறப்பாக இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் ஜெயலலிதா சொன்னது போல அந்தக் காலத்தில் அதிமுக என்ன, அனைத்து தமிழருமே, இல்லை உலகமே ஈழத்தமிழர்பால் இரக்கம் கொண்டிருந்தது உண்மைதான். 1987இல் கிடைத்த மிகவும் நியாயமான தீர்வை புறந்தள்ளியதாலும், புலிகளின் இனவெறிக் கொள்கைகளை ஆதரித்ததாலும் உலக மக்களின் நல்லாதரவை ஈழத்தமிழர் இழந்தது நிதர்சன உண்மை.

காட்டுமிராண்டிகளான ஈழத்தமிழர் இனியும் திருந்துவதற்கு வாய்ப்பு குறைவென்றாலும், குறைந்தபட்சம் தமிழகத்தவராவது திருந்தலாம். முத்துகுமார் போன்ற வெகுளிகளின் உயிராவது மிஞ்சும். அதற்கு ஊடகங்கள் தானே முன்வந்து ஈழத்தின் உண்மைகளையும், புலிகளின் பாசிசக் கொள்கைகளையும் தோலுரித்துக் காட்டவேண்டும்.

1983 இல் புலிகள் 13 இராணுவ வீரர்களைக் கொன்றதே, ஜூலைப் படுகொலைக்கு வித்திட்டது என்பதையும், சமீபத்திய ஈழப்போர்கூட புலிகள் திருகோணமலைக்கு தண்ணிர் தருகிற மாவிலாற்றை மறித்ததிலிருந்தே துவங்கியது போன்ற உண்மைகளையும் பத்திரிக்கைகள் தமிழகத்தவருக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் போன்றவை வரவேற்கத்தக்கவை.